மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, இணையமைச்சர் எல்.முருகன் கடிதம்..!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, இணையமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, இணையமைச்சர் எல்.முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.