பத்திரிகையாளர்களிடம் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? -அண்ணாமலை

பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியதை தவறாக சித்தரித்து பரப்புகின்றனர் என அண்ணாமலை பேச்சு.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கோவையில் முழு கடையடைப்புக்கு பாஜக மாநில தலைமை நிர்பந்திக்காது” கோவை பந்த் குறித்து மாவட்ட பாஜக மற்றும் மக்கள் முடிவு செய்ய வேண்டும். கோவை வழக்கை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்காமல் 4 நாட்கள் தாமதப்படுத்தியது ஏன்? மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என டிஜிபி கூறுகிறார். அக்.18ம் … Read more

பாஜக பந்த்.! அழைப்பு விடுக்கவில்லை.! உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு பதில்.!

முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுக்கவில்லை எனவும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை. – பாஜக முழு அடைப்புக்கு தடை கேட்ட வழக்கில் அண்ணாமலை தரப்பு விளக்கம்.  கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வு தொடர்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடைபெறும் என பாஜக செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்து இருந்தார். இதற்கு தடை கேட்டு , சென்னை … Read more

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு – அண்ணாமலை ட்வீட்

கடலூரில் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இதுகுறித்து அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். இன்று கடலூர் மாநகர திமுக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த போராட்டத்தில் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வர்  அவர்களை பேச சொல்லுங்கள் … Read more

தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? – அண்ணாமலை

தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி.  திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நேற்று பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க … Read more

அண்ணாமலை மோடியை போலவே பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்துக்கொள்வது – கே.எஸ்.அழகிரி

மனம் போன போக்கில் வாயில் வருவதை எல்லாம் வார்த்தைகளாக அண்ணாமலை பேசுவது அநாகரிகமானது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் பேட்டி எடுக்க சென்ற போது, அவர்களை பார்த்து, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். அன்னமலை இந்த பேச்சு தற்போது பேசும் பொருளாகியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் … Read more

ஊடகவியலாளர்கள் நம்மை கேள்வி கேட்கத் தான் இருக்கிறார்கள் – அண்ணாமலை

ஊடகவியலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன் என திருமாவளவன் பேட்டி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் பேட்டியளிக்க சென்ற போது, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்து இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன்  அவர்கள்,’தமிழ்நாடு பாஜக தலைவரின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது. ஊடகவியலாளர்கள் நம்மை கேள்வி … Read more

மேன்மக்கள் என்றும் மேன்மக்களே – அமைச்சர் செந்தில் பாலாஜி

செய்தியாளர்கள் குறித்து அண்ணாமலை  பேசியது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.  செய்தியாளர்கள் பேட்டியளிக்க சென்ற போது, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், ‘ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே’ … Read more

அதிமுக பிரச்னையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது – வைகோ

தமிழகத்தின் நல்லிணக்கத்தை சீர் குலைக்க பாஜக முயற்சி செய்கிறது என வைகோ குற்றசாட்டு.  மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியை திணிப்பது மூலம் பாதிக்கப்படவர்கள் தமிழர்கள் தான்; தமிழக மீனவர்களை தாக்கும் போது இந்தி தெரியாதா என கூறி தாக்கி உள்ளனர். தமிழகத்தில் சமத்துவம், சகோதரத்துவத்தை யார் பாழ்படுத்த நினைத்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அண்ணாமலை பொறுப்பு இல்லாமல் அபாண்டமான குற்றசாட்டுகளை கூறி பொறுப்பில்லாமல் பேசி வருகிறார். தமிழகத்தின் நல்லிணக்கத்தை … Read more

இந்த போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது – திருமாவளவன்

தமிழ் மொழிக்காக பாஜக நடத்தும் போராட்டம் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது என திருமாவளவன் விமர்சனம்.  சென்னை அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலையை தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அம்பேத்காரின் முழு உருவ சிலையை திறந்து வைத்த முதல்வருக்கு நன்றி. திமுகவுடன் ஜனநாயக … Read more

இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் – அண்ணாமலை

பெண்களை பற்றி தவறாக பேசும் திண்டுக்கல் லியோனிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என அண்ணாமலை பேச்சு.  கடலூரில் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் போராட்டம்.வெங்காய அரசாங்கம் என பெரியார் கூறினார். இந்தி எதிர்ப்பு என்பது ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சந்தேகம் இருந்தால் இந்தி … Read more