மேன்மக்கள் என்றும் மேன்மக்களே – அமைச்சர் செந்தில் பாலாஜி

செய்தியாளர்கள் குறித்து அண்ணாமலை  பேசியது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். 

செய்தியாளர்கள் பேட்டியளிக்க சென்ற போது, என்ன மரத்துமேல குரங்கு தாவுற மாதிரி எல்லாரும் சுத்தி, சுத்தி வாறீங்க. ஊருல நாயி, பேயி சாராயம் விற்கிறவன் சொல்றதெல்லாம் கேட்பீங்க சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், ‘ஊடகவியலாளர்களை முன்கள பணியாளர்களென பெருமைப்படுத்தினார், நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள். பாஜக தலைவரோ குரங்குகள் என்கிறார். மேன்மக்கள் என்றும் மேன்மக்களே’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment