கோவை கார் சிலிண்டர் விபத்து.! கைதான 3 பேருக்கு நீதிமன்ற காவல்.!

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக அண்மையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை டிசம்பர் 22ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் விதித்து முபின் என்பவர் உயிரிழந்தார். அந்த சிலிண்டர் விபத்தின் பின்னணியில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கருதி இந்த வழக்கு சென்னை காவல் துறையினரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பிடம் சென்றது. என்ஐஏ அதிகாரிகள் … Read more

குக்கர் குண்டுவெடிப்பு.! ஷாரிக்கின் தமிழக வருகை.! கோவை முபின் உடன் தொடர்பா.? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உடன் இருந்த பயணி ஒருவர் என இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இதன் பின்னர், விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ஆட்டோ ஓட்டிவந்தவர் முகமது ஷாரிக். இவரது சொந்த … Read more

கோவை கார் வெடிப்பு எதிரொலி.! தமிகத்தில் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு வெகு விரைவில்…

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எனும் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்த விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தீவிரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருந்ததை தொடர்ந்து முதல்வர் பரிந்துரையின் … Read more

கோவை கார் வெடி விபத்து.! 900 பேரின் விவரங்கள் சேகரிப்பு.!

 கோவை கார் வெடி விபத்து சம்பவத்தை அடுத்து அரசியல் தொடர்பாக இருப்பவர்கள், இஸ்லாமிய இயக்கத்தில் இருப்பவர்கள் என கிட்டத்தட்ட 900 பேரின் விவரங்கள் போலிசாரால் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி உக்கடம் அருகே காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை செய்ததில் முபின் வீட்டில் 76 கிலோ வேதிப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து முபினுக்கு … Read more

இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம்.! – ஜமாத் கூட்டமைப்பு தலைவர் பேட்டி.!

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை, உக்கடம் பகுதியில் நடந்த கற் சிலிண்டர் வெடி விபத்து தமிழகத்தில் ஓர் பதற்றத்தை உருவாக்கியது என்றே கூறலாம். இருந்தும் தமிழக காவல்துறையின் துரித நடவடிக்கைகள் பதற்றத்தை வெகுவாக குறைத்தன. தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மேற்கொண்டு வருகிறது. இதில் தமிழக காவல்துறை உதவியுடன் இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெடி விபத்து நடந்த இடம் அருகே உள்ள இந்து கோவிலில் … Read more

கார் வெடி விபத்து.! கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை.!

கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக கோவை உக்கடத்தில் முகமது உசேன் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடத்தில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான விசாரணையில் முபின் வீட்டிலிருந்து 76 கிலோ வேதிப்பொருட்கள் போலீசார் சோதனையில் கைப்பற்றப்பட்டன. பின்னர் , இவருக்கு உதவியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றனர். இந்த … Read more

கோவை கார் வெடிப்பு.! நெல்லையில் 4 பேரிடம் விசாரணை நிறைவு.!

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து போலீசார் விசாரணையில் … Read more

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – காவல்துறையினரை பாராட்டிய அண்ணாமலை…!

மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நான் கருத்துக்களை சொல்கிறேன் என அண்ணாமலை பேட்டி.  கோவையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது. கோவை மாநகர காவல் துறையினர் … Read more

கோவை கார் வெடிப்பு.! நெல்லையை தொடர்ந்து திருவாரூரில் காவல்துறையினர் அதிரடி சோதனை.!

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அசாருதீன் , இடியாஸ், சாஜித், ரிஸ்வான் ஆகியோர் வீடுகளில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அவரது வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களின் சோதனை செய்து 76 கிலோ வேதிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அடுத்ததாக, அவருக்கு உதவியதாக, முபின் உடன் தொடர்பில் இருந்ததாக … Read more

கோவை கார் வெடிப்பு.! என்ஐஏ விசாரணை பற்றி விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு.! 

கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.  கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை இதுவரை தமிழக காவல் துறை செய்து வந்து தற்போது அந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவிடம் ஒப்படைத்தனர். தற்போது அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக தமிழக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த விசாரணை குறித்து தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் … Read more