ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை தூத்துக்குடி செல்கிறார்!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை தூத்துக்குடி செல்கிறார் . தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு … Read more

கன்னியாகுமரி மீனவர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்!

கன்னியாகுமரி அருகே,தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும்  மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குரும்பனை பகுதி மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் அப்பகுதியிலுள்ள இன்னாசி தேவாலயப் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கருப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் தடையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நீதி வழங்க … Read more

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாகர்கோவில் சிவக்குமார் தொடர்ந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

திருச்செந்தூர் கோவிலில் முருகன் அவதரித்த வைகாசி விசாக திருநாள்யொட்டி திரண்டு பக்தர்கள் வழிபாடு!

திரளான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில்  பங்கேற்று வழிபாடு நடத்தி வருகின்றனர். முருகன் அவதரித்த நாளாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனை வழிபட்டால் ஆண்டுதோறும் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோவிலில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துவதற்காக திரண்டு வருகின்றனர். வைகாசி விசாகம் காரணமாக நள்ளிரவு 1 மணி அளவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் … Read more

தூத்துக்குடியில் பகீர் தகவலை வெளியிட்ட ஒபிஎஸ்!துப்பாக்கிச்சூட்டில் இவ்ளோ பேர்தான் உயிரிழந்துள்ளனர்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நெஞ்சை உருக்கும் சம்பவமாக அமைந்துவிட்டது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். மேலும்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் காயமடைந்த 47 பேரை சந்தித்து ஆறுதல் கூறினோம்.சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் நலம் பெற்று திரும்புவார்கள் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர் என்று பகீர் தகவலை … Read more

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஓபிஎஸ் நேரில் ஆறுதல் !

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,தூத்துக்குடியில் கலவரத்தின் போது காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது … Read more

துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் உத்தரவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டை தலா 20 லட்சம் ரூபாயாக அதிகரித்து வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, தவிர்க்க முடியாத சூழலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், துரதிர்ஷ்ட வசமாக 13 பேர் உயிரிழந்தது தமக்கு துயரத்தையும், மனவேதனையையும் அளித்ததாக குறிப்பிட்டடுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், துப்பாக்கிச் … Read more

இன்று தூத்துக்குடி வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!

தூத்துக்குடியில் அமைதி திரும்பியதை அடுத்து, நாளை அங்கு செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் அமைதி நிலை திரும்பியதை அடுத்து, அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 8 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடி செல்கிறார். போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களையும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் … Read more

போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…!

துப்பாக்கி குண்டுகளுக்கு உறவுகளை பரிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூற நம்மிடம் வார்த்தையில்லை; சொல்வதற்கு திராணியுமில்லை. பதினேழு வயதுச் சிறுமி ஸ்னோலின் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. அவரது அம்மா வனிதா தான் இவ்வாறு கேட்கிறார்: “போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…. அரசாங்கத்த எதிர்த்தா நாங்க போராடினோம், இல்லையே! ஒரு தனியார் முதலாளிக்காக இத்தனை பேர சுட்டுக் கொல்லனுமா?” இல்லை தாயே….முதலாளிகளுக்காகத் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அல்லது அரசாங்கத்தையே அந்த முதலாளிகள் தான் நடத்துகிறார்கள் … Read more

தூத்துக்குடிஅரசு மருத்துவமனையில் டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆய்வு..!

தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்த போலீசார் மற்றும் பொதுமக்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த  டி.ஜி.பி.ராஜேந்திரன், துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தத்தையும், வலியையும் தருவதாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் காயம் அடைந்த காவலர்களும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவலர்களையும், சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களையும் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்த டி.ஜி.பி. ராஜேந்திரன், போராட்டத்தின்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து இருதரப்பிடமும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி … Read more