BREAKING NEWS:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவு?திரேஸ்புரத்தில் மீண்டும் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கி சூடு?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்த 2 துணை வட்டாட்சியர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர்.இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடியில் பதட்ட நிலை நீடித்து வந்தது. 21ந் தேதி அன்றிலிருந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது கண்ணன் மற்றும் சேகர் ஆகிய இரண்டு துணை வட்டட்சியாளர்கள் உத்தரவிட்டது தெரியவந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் எச்சரித்தும் வன்முறை தொடர்ந்ததால் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட நேரிட்டது என்று கண்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் மற்றொரு வட்டட்சியாளர் சேகர் கூறுகையில், ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு என்று தெரிவித்துள்ளார்.

திரேஸ்புரத்தில் மீண்டும் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கி பிரயோகம் செய்ய ஆய்வாளருக்கு ஆணையிடப்பட்டது. தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன் துப்பாக்கிச்சூடு உத்தரவு பற்றி எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்து சேதத்தை தவிர்க்க துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு  என்றும்  வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு குறித்த முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment