காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாய்க்கு திடீர் மவுசு!

ரஜினியுடன் காலா படத்தில் நடித்த நாயை விலைக்கு வாங்க 2 கோடி ரூபாய் வர தர ரசிகர்கள் தயாராக உள்ள போதும் அதன் பயிற்சியாளர் விற்பதற்கு மறுத்துவிட்டார். காலா படத்தில் ஆசாமி என்ற பெயரில் நடித்துள்ள இந்த நாயின் உண்மையான பெயர் மணி. இதன் பயிற்சியாளர் சைமன், நாயை இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு காட்டியதில் 30 நாய்களைப் பார்த்து திருப்தியடையாமல் இருந்த அவர் உடனே காலா படத்தில் மணியை நடிக்க வைத்தார். காலா புகழால் இதன் விலை மதிப்பு 2 … Read more

இன்றைய(ஜூன் 08 ) பெட்ரோல்,டீசல் விலை!

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.59 காசுகளாகவும், டீசல் விலைலிட்டருக்கு ரூ.72.56 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

வீட்டின் மதில் சுவர் இடிந்து விழுந்து சென்னையில் இரு குழந்தைகள் உயிரிழப்பு!

மதில் சுவர் சென்னையில்  இடிந்து விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அமைந்தகரை கக்கன் நகர் பகுதியில் சகோதரர்களான அன்சார் மற்றும் பைரோஸ் ஆகியோரின் குழந்தைகள் 4 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் தயான். . இவர்கள் வீட்டின் முன்பாக மரம் ஒன்று வளர்ந்திருந்த நிலையில் வேர் துளைத்து மதில்சுவர் பலவீனமடைந்த நிலையில் இருந்தது. இதனை கவனிக்காமல் விட்ட நிலையில், மழை காரணமாக சுவர் மேலும் விரிசலடைந்தது. இந்நிலையில் மாலை 6 … Read more

இரண்டு கல்லூரி மாணவிகள்!ஒரே காதலன்!காதலனுக்காக  மொபைல் போன்கள் திருட்டு!இறுதியில் காவல்துறையினரிடம் சிக்கிய மாணவிகள்!

இரண்டு கல்லூரி மாணவிகள் ஒரே காதலனுக்காக  மொபைல் போன்களை திருடி காவல்துறையினரிடம் சிக்கிய வினோதமான சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மும்பையின் மின்சார ரயில்களில் பெண் பயணிகளின் மொபைல் போன்கள் காணாமல் போகும் சம்பவங்கள் கடந்த 2 மாதங்களில் அதிகரித்து வந்தது. இது தொடர்பாக பயணிகள் ரயில்வே துறையினரிடம் புகார்கள் அளித்தனர். பெரும்பாலான திருட்டு சம்பவங்கள் பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில், குறிப்பாக போரிவாலி – சாண்டாகுரூஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே தான் நடைபெற்றுள்ளது என்பதை ரயில்வே குற்றப்புலணாய்வுப் பிரிவு அதிகாரிகள் … Read more

உயர்நீதிமன்றம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்புக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றம் ,108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட அவசர வழக்கை இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. சேலம் ஆத்தூரை சேர்ந்த செல்வராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 ஆயிரத்து 750 பேர் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்றும், … Read more

தமிழகம் சமயநல்லிணக்கத்துக்கு முன்மாதிரி மாநிலம்!முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சமய நல்லிணக்கத்துக்கு முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக  பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அதிமுக சார்பில் வியாழனன்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு உலமாக்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் … Read more

எனக்கு ஒன்னும் ரஜினியா மாற ஆசை இல்ல!ஆனா நான் இப்பத்தான்!சிம்பு

நேற்று வெளியான  காலா திரைப்படம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் தனுஷ், “ கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுகிறார். அந்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பலரும் ஆசைப்படுகிறார்கள் என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ரஜினி மாதிரி, எம்ஜிஆர் மாதிரி … Read more

சென்னையில் இரவு நேரங்களில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

பைக் ரேசில் ஈடுபட்ட 6 இளைஞர்களை  சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறு திரு.வி.க. பாலத்தில், புதனன்று இரவு இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிவேகத்தில் சீறிய அந்த இருசக்கர வாகனங்களால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். தகவலறிந்த அடையாறு போலீசார், பந்தயத்தில் ஈடுபட்டவர்களை விரட்டிச் சென்றனர். எனினும் தப்பிச் சென்ற அந்த இளைஞர்கள், ஒரு பைக்கை தவறி விட்டுச் சென்றனர். அதன் பதிவெண்ணைக் கொண்டு, உரிமையாளரை கண்டுபிடித்த போலீசார், அவரை பிடித்து … Read more

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்!

இன்று  இரவு முதல் தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்காக பல முறை, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, … Read more

நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!கோகுல்ராஜ் கொலை வழக்கில் 13 பேரின் ஜாமீன் ரத்து!

நாமக்கல் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி, பிணையில் இருந்த 13 பேரின் ஜாமீனை ரத்து செய்துள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொல்லப்பட்ட வழக்கில், யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜோதிமணி என்ற பெண் இறந்து விட, யுவராஜ் திருச்சி சிறையிலும், அவரது ஓட்டுநர் அருண் கோவை சிறையிலும் உள்ளனர். மீதமுள்ள 14 பேருக்கு, நாமக்கல் மாவட்ட முதன்மை … Read more