போலி சாதி சான்றிதழ் விவகாரம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது உயர்நீதிமன்றம்..!

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சிவஜெயப்பிரகாஷ் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், தான் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போலி சாதிச்சான்றிதழ் பெற்றுள்ளதாகவும், ஆனால், அவர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று அவர் தொடுத்த வழக்கில் தெரிவித்துள்ளார். கிருஷ்ணசாமி பெற்றுள்ள சாதி சான்றிதழை ரத்து … Read more

நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் காட்சியளிக்கும் மழைநீர்

நெல்லை-கன்னியாகுமரி வழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியாளிக்கிறது. கன்னியாகுமரியில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல்லை கன்னியாகுமரி  தேசிய நெடுஞ்சாலையில் பணகுடி அருகே வெல்ல நீர் சாலைகளில் வெள்ளம் போல் ஓடுகிறது. இதே மாதிரி வெள்ளநீர் அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், நெடுஞ்சாலை போக்குவரத்து தடை படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 3000 பேர் தவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடல் சீற்றம், புயல் தெரியாமல் நேற்று  சென்ற மீனவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும் அனால், கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தவித்துவருகின்றனர். அவர்களை மீட்க கடற்படை சார்பில் இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை என அந்தபகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு…!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவிப்பு செய்துள்ளார். கார்த்திகை தீபத்திருநாள் அன்று கார்த்திகை தீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சல சுவாமியின் ஆலையமே வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் இதனால் அங்கு இந்த திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம்.

கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

கன்னியாகுமரியில் ஓகி புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வீடுகளை விட்டு மக்கள் யாரும் வெளியே வர இயலாத சூழல் உருவாகியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபாடுள்ளது. இதனால் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவைகளில் பெரிதும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கொல்லம் முதல்  சென்னை எழும்பூர்  வரை செல்லும் அனத்தபுரி ரயில் திருவனத்தபுரம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு.

குமரி மாவட்ட 4 மீனவர்கள் மீட்பு

கன்னியகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் காரணமாக சுமார் 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது, இதனால் குமாறி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் மண்டைகாடு, புதூர் பகுதி மீனவர்கள் கடலுக்குள் மீன்பிக்க சென்றனர். அப்போது படகு கவிழ்ந்து உயிருக்கு போராடிய நிலையில் முட்டம் பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.

மனித குலத்தை அழிக்கும் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழும் ..விஞ்ஞானிகளின் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

மனித சாம்ராஜ்யத்தையே அழிக்கும் எரிமலை வெடிப்பானது மிக விரைவில் நிகழப்போகிறது என விண்வெளி அறிவியல் ஆராச்சியாளர்கள் கணித்துள்ளனர்.Volcanic super-eruption எனப்படும் மாபெரும் எரிமலை வெடிப்பால் இந்த அபாயம் இருப்பதாகவும், ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட  இது மிக விரைவிலேயே நிகழும் என்று தற்போது கணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 45,000 – 7,14,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாபெரும் எரிமலை வெடிப்புகள் நிகழும் என விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், அடுத்தமுறை நிகழும் என்று கணிக்கப்பட்ட எரிமலை வெடிப்பு கணிக்கப்பட்டதைவிட வெகுவிரைவில் நிகழும் … Read more

ஒகி புயலாக உத்தரவுவிட்டுள்ளார் முதலமைச்சர் அதிரடி

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்  புயலாக மாற்றியுள்ளது .இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில்,தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள மரங்களை வேறொடு பிடுங்கி எறிகிறது அந்த புயல். கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி,மீ தொலைவில் புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு  மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஓகி என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்து இருந்தது.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்று … Read more

திருமணம் கிடையாது ஆனால் அதுமட்டும் ஓகே

நாயகிகளின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவர். ஆனால் நடிகை லேகா வாஷிங்டன் ஒரு வித்தியாசமான திருமணம், அதை திருமணம் என்று சொல்ல முடியாது, ஒரு விஷயத்தை செய்துள்ளார். ஓகே கண்மணி படத்தில் வருவது போல  இதுநாள் வரை லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த லேகா DIY Partnership என்ற முறையில் திருமணம் போல் ஒரு முறையில் தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துள்ளார். அதற்காக விழா அண்மையில் உறவினர்கள் … Read more

ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ள சூர்யாவின் ” தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…!

  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா,கீர்த்தி சுரேஷ் ,ரம்யா கிருஷ்ணன்,செந்தில் ,தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான்” தானா சேர்ந்த கூட்டம்”.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ரசிகர்ளுக்கு விருந்தாக அமைய உள்ளது இன்று மாலை 7 மணியளவில் வெளியிடப்படவுள்ள “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் டீசர்…..