நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாளை பத்தாம் வகுப்பு மாணவர்கள் 10 லட்சத்து ஆயிரத்து 140 பேர் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியாகிறது. இணையதளத்தில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை பார்க்கலாம். 10ஆம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும் தேர்வு எழுதினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்தார். அதன்படி விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது. மதிப்பெண்கள் பட்டியல் மீண்டும் சரிப்பார்க்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து முடிந்தன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. காலை 9.30 மணி முதல் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment