குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

சுற்றுலாப் பயணிகள் தென்காசி அருகே உள்ள குற்றால மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதையடுத்து குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் வரத்து நேற்று இரவு அதிகரித்தது. நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை தண்ணீர் குறைந்ததையொட்டி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment