தூத்துக்குடி வந்தடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தூத்துக்குடி வந்தடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!

தூத்துக்குடி வந்தடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். இந்நிலையில் 100வது நாள் போராட்டமான கடந்த 22ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். ஆனால் பேரணி வன்முறையாக மாறியதால் போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களில் முதலில் 65 பேரும், பின்பு 74 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது தூத்துக்குடி வந்தடைந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சற்று நேரத்தில் சந்திக்கிறார் ஆளுநர்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *