ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து சென்னை திரும்பினார்!

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை அடுத்து, உதகையில் இருந்து  சென்னை திரும்பினார்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21ம் தேதி அவர் குடும்பத்தினருடன் சென்றார். அடுத்த மாதம் 2ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க அவர் திட்டமிட்டு இருந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பிற்பகலில் கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை திரும்பினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment