Breaking News: சென்னை வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங் ..!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த 2 நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங்  தனி விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வந்த சீன அதிபருக்கு மேளதாள வாத்தியங்கள் , கலை நிகழ்ச்சி முழுக்க தமிழகம் சார்பில் சீன அதிபருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்கும் சீன அதிபர் இன்று மாலை கோவளத்தில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். நாளை கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கேவ் ஹோட்டலில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஷி … Read more

சீன அதிபரை அழைத்துச் செல்ல விமான நிலையம் சென்ற குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள்

சீன அதிபரை அழைத்துச் செல்ல பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது.  சீன அதிபர் வருகையையொட்டி சென்னை ஜிஎஸ்டி சாலை, விமானநிலையம் முதல் கிண்டி சோழா நட்சத்திர ஓட்டல் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்  சின்னமலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங் சற்று நேரத்தில் சென்னை வருகிறார். சீன அதிபரை அழைத்துச் செல்ல குண்டு துளைக்காத பாதுகாப்பு வாகனங்கள் சென்னை விமான நிலையம் சென்றுள்ளது. 

சென்னை வந்திறங்கியுள்ளேன்-தமிழில் பிரதமர் மோடி ட்வீட்

சென்னை வந்திறங்கியுள்ளேன் என்று தமிழில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இதனால் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். pic.twitter.com/NxVUDlU86Y — Narendra Modi (@narendramodi) October 11, 2019 இது … Read more

சென்னை வந்தார் பிரதமர் மோடி..!

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. இந்திய விமான படைக்கு சொந்தமான விமானத்தில் மோடி சென்னை வந்தார்.விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சற்று நேரத்தில் பிரதமர் மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார்.விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி , துணை முதலமைச்சர் பன்னிர்செல்வம் , ஆளுநர் ,ஜி.கே வாசன் மற்றும் பிரேமலதா ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர். தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று(அக்.11) சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக இரு நாட்டு தலைவர்களும் இன்று சென்னை வர உள்ள நிலையில்  பிரதமர் மோடியை  வரவேற்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் … Read more

நாளை வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனகள் அறிவுறுத்தல்..!

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில்  நாளை பிரதமர் மோடி ,சீன அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதால் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனகளில்  வேலை செய்பவர்கள் நாளை வீட்டிலிருந்து வேலைகளை செய்ய அங்கு உள்ள நிறுவனங்கள் கூறியுள்ளது.

சீன அதிபர் வருகை-சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

நாளை மறுநாள் சீன பிரதமர் ஷி ஜின்பிங் சென்னைக்கு வருகிறார். அடுத்த மறுநாள் இந்திய பிரதமர் மோடி- சீன பிரதமர் ஜின்பிங்க் சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மாமல்லபுரம் வருவதால் பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒருங்கிணைப்புகாக  34 அதிகாரிகளும் ,மேற்பார்வையிட 10 ஐ .ஏ எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு … Read more