கோவை மாணவி தற்கொலை ! நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்த கனிமொழி .!

நீட் தேர்வு பயத்தால் கோவை மாணவி தற்கொலை செய்ததை தொடர்ந்து, இந்தாண்டாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவையை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகளான சுபஸ்ரீ, கடந்த 2வருடங்களாக நீட் தேர்வுக்காக ஒரு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்தாண்டு பல் மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். பின்னர் பொது மருத்துவ படிப்பில் சேர இந்தாண்டிற்கான நீட் தேர்வுக்கு … Read more

1,00.00,000 ரூபாய் இழப்பீடு கேட்டு மறைந்த சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ அப்பகுதி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த திருமண வாழ்த்து பேனர் சுபஸ்ரீ மேலே விழுந்தது. நிலை தடுமாறி கிழே விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையினை ஏற்படுத்தியது. பேனர் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என … Read more

தவறு நடந்தால், தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு : நடிகர் சினேகன்

நடிகர் சினேகன் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட பாடலாசிரியரும், கவிஞரும் அவர். இவர் தமிழில் பாண்டவர் பூமி என்ற பாடலை முதன் முதலில் இயற்றியுள்ளார். அதன்பின் தமிழில் இவர் யோகி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சென்னையில், அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்து  பேசினார். நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் குறித்து பேசியது பலரின் விமர்சனத்திற்குள்ளானது. இதுகுறித்து கவிஞர் சினேகன் அவர்கள் பேசுகையில், தவறு நடந்தால், அதனை தட்டி கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது எனக் கூறியுள்ளார்.

யாராவது ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா? பேனர் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் அதிரடி!

நடிகர் எஸ்.வி.சேகர் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.  சமீபத்தில் பேனரால் சுபஸ்ரீ என்ற இளம் வயது பெண் காலமானார். இதனையடுத்து, இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து தணலது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இளம் பெண் உயிரிழப்பையடுத்து, சென்னை மாநகராட்சி, டிஜிட்டல், பேனர் அச்சகங்களுக்குக் நோட்டீஸ் அனுப்பியது. அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அச்சிடுவோருக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.5,000 … Read more

கண்ட இடங்களில் பேனர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும்! நடிகர் விவேக் ட்வீட்!

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர். இவரை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தாமல், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார். இவர் மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பதாக சுபஸ்ரீ என்ற இளம்பெண், இந்த பேனரால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, கண்ட இடங்களில் பேனர் போஸ்டர் … Read more