இஸ்ரேலிய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட 3 இஸ்ரேலிய பணைய கைதிகள்..!

Israel Hamas War

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்  துவங்கியது. இந்த போர் தொடங்கி 2 மாதங்களை கடந்த நிலையில், இந்த போர் இதுவரை முடிவுக்கு வந்தபாடில்லை.  இந்த போரில் இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருதரப்பினரும் நடத்திய தாக்குதல், காஸாவில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள், உறவுகளை, உடைமைகளை இழந்து அருகாமையில் உள்ள நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். காஸா மீதான தாக்குதலை குறைத்திடுங்கள்.! இஸ்ரேலிடம் வலியுறுத்திய அமெரிக்கா.! கடந்த … Read more

தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்..! பெற்றோர் மீது வழக்குப்பதிவு..!

Baby

அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை … Read more

கேரள பள்ளியில் திடீர் துப்பாக்கி சூடு… பரபரப்பில் திருச்சூர்! நடந்தது என்ன?

shooting

கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் ஜெகன் என்பவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு உயிர்சேதம் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. பின்னர் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர் ஜெகனை பொதுமக்கள் … Read more

பாரிஸில் துப்பாக்கிசூடு – 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், குர்தீஸ் கலாச்சார மையத்தை குறிவைத்து நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 69 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை … Read more

மியான்மரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்…!

மியான்மரில் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால்  2 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த குழுவால் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்களும் மணிப்பூரில் வசித்து வந்தவர்கள். இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் உடலும் தற்போது மியான்மரில் உள்ள தம்மு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி

ஓக்லஹோமாவில் உள்ள துல்சாவில் உள்ள மருத்துவ மையத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை மதியம் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் ,இந்த கொடூர தாக்குதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை ,அடையாளம் தெரியாத நபர் தாக்குதலின் போது கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி(Rifle) இரண்டையும் வைத்து  சுட்டதாகஎன்று துல்சா துணை போலீஸ் தலைவர் எரிக் டால்க்லீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 … Read more

நிறைவடைந்தது சந்தானத்தின் குளு குளு படப்பிடிப்பு …!

ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் நான் குளு குளு. இந்த படம் தெலுங்கில் வெளியாகிய ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா எனும் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதுல்யா ரவி, பிரதீப் ராவத், நமிதா கிருஷ்ணமூர்த்தி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தினை பிலோமின் ராஜ் அவர்கள் படத்தொகுப்பு செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் … Read more

இலங்கையில் போலீசார் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு ; 12 பேர் காயம்!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களில் பலர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள … Read more

#ShockingVideo:ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு;13-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில்,நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் நேற்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இது தொடர்பான வீடியோ தற்போது  சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Very dramatic video from the incident as the subway arrived at 36th … Read more

கடத்தலுக்கு எதிர்ப்பு…! பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட இந்து சிறுமி..!

கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்  பாகிஸ்தானில் இந்து சிறுமி சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  பாகிஸ்தானில் அடிக்கடி சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக கடத்தி மதமாற்றம் செய்வதும், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. கடத்தல் முயற்சி அந்த வகையில் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற இடத்தில் வசித்து வந்த இளம்பெண் பூஜா. இவருக்கு வயது 18, இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது வீட்டின் அருகில் உள்ள தெருவில் … Read more