கேரள பள்ளியில் திடீர் துப்பாக்கி சூடு… பரபரப்பில் திருச்சூர்! நடந்தது என்ன?

கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு பள்ளியில் முன்னாள் மாணவர் ஜெகன் என்பவர் திடீரென கைத்துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திரிச்சூர் அருகே நிக்கனலில் இயங்கி வரும் விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர் ஒருவர் தனது பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீரென துப்பாக்கியை எடுத்து மேல் நோக்கி சுட்டுள்ளார்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு உயிர்சேதம் ஏதும் நல்வாய்ப்பாக ஏற்படவில்லை. பின்னர் துப்பாக்கியால் சுட்ட முன்னாள் மாணவர் ஜெகனை பொதுமக்கள் பிடித்து திருச்சூர் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தகவலறிந்து வந்த போலீசார் அந்த முன்னாள் மாணவரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய முன்னாள் மாணவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

உத்தரவை கிடப்பில் போட்ட டெல்லி அரசு.? எச்சரிக்கை விடுத்த உச்சநீதிமன்றம்.!

இதுதொடர்பாக பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை பற்றி விசாரித்தப்பின் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர், தான் படிக்கும்போது தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த தொப்பியை திருப்பி தருமாறு கோரியதாகவும், பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, முன்னாள் மாணவர் எதற்கு பள்ளிக்கு சென்று துப்பாக்கிசூடு நடத்தினார்?, அவர் மதுபோதையில் இருந்தாரா? அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?, எதாவது உள்நோக்கத்துடன் இந்த துப்பாக்கிசூடு நடத்தினரா? என பல்வேறு கோணங்களில் அப்பகுதி காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்