இலங்கையில் போலீசார் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு ; 12 பேர் காயம்!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை, எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன் மின் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கை மக்களில் பலர் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் அரசின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal