திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவச அனுமதி

உலக மரபு வாரத்தை ஒட்டி, மதுரை திருமலை நாயக்கர் மஹாலை, இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மதுரையின் முக்கிய அடையாளமாக இருப்பது திருமலை நாயக்கர் மஹால்.இது 17 ஆம் நூற்றாண்டு அரசர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. உலக மரபு வாரம் கொண்டாடப்படுவதை ஒட்டி, திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வாரம் நுழைவு கட்டணமின்றி சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 19 முதல் 25 வரை காலை 10 … Read more

விஐபிகளுக்கு 10அடிக்கு ஒரு பாதுகாவலர்.! மகளிர் கல்லூரிக்கு பாதுகாப்பு இல்லை.! – உயர்நீதிமன்றம் காட்டம்.!

விஐபிகளுக்கு 10 அடிக்கு ஒரு பாதுகாவலர் செல்கிறார். ஆனால், மாணவிகளுக்கு பாதுகாப்பாக காவலர்களை நிறுத்தலாமே என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மகளிர் கல்லூரியில் மாணவியின் தந்தையை சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் விட்ட்டோரியா என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் கல்லூரியிலும் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை தமிழக அரசு … Read more

மதுரை பட்டாசு ஆலை விபத்து.! அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு.!

மதுரை அழகு சிறையில் தீ விபத்து ஏற்பட்ட பாட்டாசு ஆலையில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.   மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையின் இன்று தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை தரைமட்டமானது. இதில் 15க்கும் மேற்பட்டவர்கள் காலையில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். அதில் 5 பேர் படுகாயமுற்று தீவிர சிகிச்சையில் … Read more

மதுரை பட்டாசு ஆலையில் தீ விபத்து.! 2 பேர் பலி.! 10 பேர் படுகாயம்.!

மதுரை மாவட்டம் அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன.  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை இன்று காலை வழக்கம் போல இயங்கி உள்ளது. 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் தரைமட்டமாகியுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விவரம் … Read more

மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது.!

மதுரையில் ஆ.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது.  நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி, பலர் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவத்தை அடுத்து அடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரை, அனுபநாடியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சமபந்தபட்ட குற்றவாளியை … Read more

அடுத்த 3 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என … Read more

கோவை, சென்னையை அடுத்து கடைசி இடத்தில் மதுரை.! திமுக அரசு மீது ஓபிஎஸ் கடும் கண்டனம்.!  

10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட தூய்மை நகரங்களின் பட்டியலில் மொத்தம் 45 இடங்களில் 42வது இடத்தில் கோவை, 44வது இடத்தில் சென்னை, 45வது இடத்தில் மதுரையும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து,  ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.   மத்திய அரசின் சார்பில் தூய்மை நகரங்கள் பற்றிய வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அதில், ‘ சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க … Read more

மதுரை ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு.! மேலும் ஒருவர் கைது.! 

மதுரை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக மாபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கோவை மாநகர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அம்மாநகர் முழுவதும் அனைத்து தரப்பு காவல்துறையினரும் குவிந்துள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே போல, … Read more

அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டினால் வழக்கு போடுங்கள்.! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி.! 

அரசு நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை. மீறினால் வழக்கு பதியப்படும். – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.  அரசு நிலத்தில் எந்தவித அனுமதியுமின்றி மரங்களை வெட்ட கூடாது எனவும் , அதே போல, அதனையும் மீறி மரம் வெட்டினால் வழக்கு போடுங்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி அருகே இருக்கும் குடகனாறு கால்வாயில் உள்ள மரங்களை சிலர் வெட்டி அழித்துவிட்டதாக மதுரை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு … Read more

மதுரையில் பறக்கும் ரயில்.. அறிக்கை தயார்.! சென்னை மெட்ரோவிடம் பரிசீலனை.!

மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமங்கலம் வரையில் பறக்கும் ரயில் திட்டத்திற்கான திட்ட வரைவை தயார் செய்து அதனை சென்னை மெட்ரோ அமைப்பிடம் கொடுத்து பரிசீலனை செய்துள்ளனர்.   தமிழகத்தில் பறக்கும் ரயில் திட்டமானது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருக்கிறது. அதே போல மதுரையில் பறக்கும் ரயில் திட்டத்தை அமல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது அதன் முதற்படியாக, மதுரையில், ஒத்தக்கடை பகுதியில் இருந்து, திருமங்கலம் வரையில், பறக்கும் ரயில் திட்டம் அமைவதற்கு திட்ட வரைவு தயாராகி உள்ளது. அந்த … Read more