அடுத்த 3 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாகவே வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தென் தமிழக மாவட்டங்களாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, மதுரை,விருதுநகர்,தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்தில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment