மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது.!

மதுரையில் ஆ.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது.  நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி, பலர் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவத்தை அடுத்து அடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரை, அனுபநாடியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சமபந்தபட்ட குற்றவாளியை … Read more

தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ…? – டிடிவி

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது டிடிவி தினகரன் ட்வீட்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி வருகிறது.  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர்  பதிவில்,தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் … Read more

பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் – கேப்டன் விஜயகாந்த் கண்டனம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது என கேப்டன் விஜயகாந்த் அறிக்கை.  கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துக்குடி  திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு … Read more

திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு.! முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்.? எச்.ராஜா விமர்சனம்.!

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது PFI அமைப்பினர் திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.- பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றசாட்டு.  தமிழகத்தில் சமீப நாட்களில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை கைது … Read more

இவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கும் கடமை அரசுக்கு உண்டு – ஓபிஎஸ்

பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு ஓபிஎஸ் கண்டனம்.  தமிழகத்தில், கோவை, கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள், ஆர்.எஸ்.எஸ். … Read more

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தெம்பில்லாத ஸ்டாலின் அரசு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

தமிழகத்தில், வெடிகுண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் என வளர்ந்து வருகிறது. இதனை தடுக்க ஆளும் அரசுக்கு தெம்பில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.  தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு கோவையில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக அங்கு பலத்த பாதுகாப்பு போடபப்ட்டது.கோவையை தொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு, … Read more

பொள்ளாச்சி பெட்ரோல் குண்டு வீச்சு – 3 பேர் கைது

பொள்ளாச்சியில், இந்து முன்னணி நிர்வாகிகளின் கார் மற்றும் ஆட்டோக்களை டீசல் நிரப்பப்பட்ட கவர்களை வீசி தாக்கிய சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது.  கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில்  பாஜக பிரமுகா்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு மற்றும் டீசல் பாக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சியில், இந்து முன்னணி … Read more

அது யார் என்று முதல்வருக்கு தெரியும்..பாரபட்சமின்றி நடவடிக்கை எடுங்க – வானதி சீனிவாசன்

கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை ஆய்வு செய்த பின் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டி. கோவையில் பெட்ரோல் குண்டு வீசிய இடங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்டமாக கோவை சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக அலுவலத்தை பார்வையிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், நாட்டை சீர்குலைக்க நினைப்பவர்கள், குண்டு வைக்க நினைப்பவர்கள் தான் இம்மாதிரியான செயலில் ஈடுபட முடியும் என குற்றசாட்டினார். அது … Read more

பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும் – அண்ணாமலை

பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி என அண்ணாமலை பேட்டி.  கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு  அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்அண்ணாமலை,  கடந்த இரு நாட்களாக … Read more

அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

திருவாரூர் செம்படவன்காடு கிராமத்தில் சந்திரபோஸ் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. திருவாரூர் மாவட்டம் செம்படவன்காடு கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகி சந்திர போஸ் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதால் இருசக்கர வாகனம் தீப்பிடித்துள்ளது. இதுதொடர்பாக முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசியதில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.