2018 தமிழக பட்ஜெட்:தமிழ் மொழி விரிவாக்க மையம் தஞ்சை தமிழ் பல்கலை.யில் உருவாக்கப்படும்!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தமிழ் மொழி, பண்பாட்டை பாதுகாக்க தஞ்சை பல்கலையில்  தமிழ் மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும் என்றும் மையத்திற்கு மானியமாக ஆண்டுக்கு ரூ.2 கோடியை தமிழக அரசு வழங்கும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.1 கோடி ரூபாய் மானியத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் அமைக்கப்படும் என்றும்  அறிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில்  தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment