பிறந்தநான்று வரலாறு படைத்த குல்தீப் யாதவ்…இவர்தான் முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்…

kuldeep yadav

இந்தியா – தென்னாபிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்,  களமிங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 2021 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்த நிலையில், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்திருந்தார். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்கா 95 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. … Read more

“நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம்” எங்கே தவறு நடந்தது- எய்டன் மார்க்ரம் விளக்கம்..!

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில்  முடிந்தது. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் இந்தியாவிடம் தென்னாப்பிரிக்கா படுதோல்வி அடைந்து தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (SA vs IND) இடையிலான T20 போட்டித் தொடரின் கடைசி போட்டி  நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. … Read more

106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரை சமன் செய்த இந்தியா..!

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி உள்ளது.  நேற்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான  மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ்  வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  ஜெய்ஸ்வால், சுப்மன் கில்  இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே  சுப்மன் கில்  12 … Read more

சதம் விளாசிய சூரியகுமார் யாதவ்… தென்னாப்பிரிக்காவிற்கு 202 ரன்கள் இலக்கு..!

இன்று தென்னாப்பிரிக்கா – இந்திய அணி இடையேயான  மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ்  வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக  ஜெய்ஸ்வால், சுப்மன் கில்  இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே சுப்மன் கில்  12 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார்.  … Read more

இந்தியாவிற்கு பெரிய அடி.. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல் ..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும், முகமது ஷமி விளையாடுவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. முகமது ஷமி ஏன் விளையாட முடியாது? Cricbuzz அறிக்கையின்படி, முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருவதால்அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என … Read more

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா? இன்று 3வது போட்டியில் பலப்பரீட்சை!

South Africa vs India

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற முதல் போட்டி மழையால் கை விடப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் 2வது போட்டி நடைபெற்ற நிலையில், அப்போது இந்திய அணி பேட்டிங் முடிவில் மழை குறுக்கீட்டாதல் இரண்டாவதாக பந்து வீசிய இந்திய அணிக்கு சூழ்நிலைகள் கடும் சவாலாக இருந்தது. அதனால், டிஎல்எஸ் முறைப்படி தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் … Read more

களத்தில் அவமரியாதை? இந்திய கேப்டனின் விக்கெட்டுக்கு பின் ஷூவை எடுத்து கொண்டாடத்தில் ஈடுபட்ட ஷம்சி!

Tabraiz Shamsi

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் – லூயிஸ் முறைப்படி 15 ஓவராக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு 152 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் … Read more

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.  இருவருமே ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங், சூர்யா குமார் யாதவ் சிறப்பாக … Read more

அரைசதம் விளாசிய சூர்யா குமார் யாதவ், ரிங்கு சிங்.. மழையால் போட்டி 15 ஓவராக குறைப்பு ..!

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறவிருந்த போது  மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர் 2-வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து, முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.  இருவருமே … Read more

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச முடிவு..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல்  போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கான 2-வது போட்டி இன்று … Read more