தெரிந்தது பிறை – தொடங்கியது ரமலான் நோன்பு!

தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன்  அறிவித்துள்ளார். பொதுவாக,இஸ்லாமியர்களின் காலண்டரில் 9-வது மாதம் ரமலான் மாதமாகும்.இந்த ரமலான் மாதத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் 30 நாட்களுக்கு நோன்பு இருப்பர்.இதில் அதிகாலை நேர தொழுகைக்கு முன்பாக உணவு உண்ணப்படுகிறது.அதனை தொடர்ந்து மாலை 6 வரை நோன்பு நோற்பவர்கள் தண்ணீர் கூட பருகுவதில்லை. இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று பிறை தென்பட்டதால் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை காஜி சலாவுதீன் … Read more

வேலூரில் இன்று முதல் 2 நாட்களுக்கு ஜவுளி கடைகள் திறக்க அனுமதி..!

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு அம்மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக்கடைகளை திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து ஜவுளி கடைகள் திறக்க அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.

ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற கிளை!

ரம்ஜான் அன்று மதுரை பள்ளிவாசலில் 2 மணிநேரம் தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், வரும் 25 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதால், ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், வீட்டிலே நடத்துமாறு முஸ்லீம் சங்க தலைவர் தெரிவித்தார். இந்நிலையில், மே 25 ஆம் தேதி, ரம்ஜான் அன்று … Read more

நோன்பு கஞ்சியை வீட்டிலேயே தயாரித்து கொள்ள தலைமை செயலர் அறிவுரை.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் , வழிபாட்டு தளங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அப்போது மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடைபெறும். இது குறித்து, தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்களுடன் இன்று தலைமை செயலர் சண்முகம், சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஆலோசித்தனர். அதில், … Read more

இஸ்லாமிய தலைவர்களுடன் தலைமை செயலர் தீவிர ஆலோசனை.!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகள், வணிகவளாகங்கள் , வழிபாட்டு தளங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு கடைபிடிப்பது வழக்கம். அப்போது மசூதிகளில் சிறப்பு தொழுகைகளும் நடைபெறும். இது குறித்து, தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் முக்கிய தலைவர்களுடன் இன்று தலைமை செயலர் சண்முகம், சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் ஆலோசித்து வருகிறார். … Read more

காஷ்மீரில் ரமதான் பண்டிகையைக் கொண்டாடி வரும் இஸ்லாமியர்கள்..!!

காஷ்மீரில் ரமதான் பண்டிகையைக் கொண்டாடி வரும் இஸ்லாமியர்கள் புனித மாதத்தின் பெருமைகளை விளக்க கவியரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அமைதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய இந்த கவியரங்கில் ஏராளமான இளம் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். மாணவ- மாணவிகளும் ஆர்வத்துடன் இதில் கலந்துக் கொண்டனர். 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த காஷ்மீரின் கவிதை மரபை அவர்கள் பின்பற்றி கவிதையால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். ஏராளமான சூஃபி கவிஞர்கள் வாழ்ந்த மண் இது என்று மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். மேலும் செய்திகளுக்கு … Read more