காஷ்மீரில் ரமதான் பண்டிகையைக் கொண்டாடி வரும் இஸ்லாமியர்கள் புனித மாதத்தின் பெருமைகளை விளக்க கவியரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அமைதியையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய இந்த கவியரங்கில் ஏராளமான இளம் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். மாணவ- மாணவிகளும் ஆர்வத்துடன் இதில் கலந்துக் கொண்டனர்.
5 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த காஷ்மீரின் கவிதை மரபை அவர்கள் பின்பற்றி கவிதையால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். ஏராளமான சூஃபி கவிஞர்கள் வாழ்ந்த மண் இது என்று மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்