திறப்பா???!நவம்பரில் கல்லூரிகள் -விளக்கும் ரமேஷ் பொக்ரியால்!

நவ.,1 முதல் கல்லுாரிகளை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், வாரத்தில் ஆறு நாட்கள் கல்லுாரியை நடத்தவும்,குளிர் மற்றும் கோடை கால விடுமுறை நாட்களை ரத்து செய்யவும்  பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பே நாடு முழுதும், மார்ச், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டது. இதன்பின் பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பரவலால், நடப்பு கல்வியாண்டில் திட்டமிட்டபடி, … Read more

ஜே.இ.இ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதே மாணவர்களின் விருப்பம் – ரமேஷ் பொக்ரியால்

ஜே.இ.இ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது செப்டம்பர் 1 முதல் 6-ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை … Read more

25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் இணைய சேவை தொடங்கியது – ரமேஷ் போக்ரியால்

இன்று 74-வது சுகந்திர தின  விழா நாடு முழுவதும் கொண்டப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இந்தியாவில் இணைய சேவை தொடங்கப்பட்டது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளத்தை பயன்படுத்தி வருவதாக கூறினார். உலகில் இணைய தளங்கள் மூலம் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் செயல்படும் அரசு இந்தியாவின் கிராமங்கள் தோறும் … Read more

#ஐஐடி நுழைவுத்தேர்வு# +2 மதிப்பெண்கள் போதுமா! விதிகள் தளர்வா??!

“நடப்பாண்டு ஐ.ஐ.டி கள் சேர்க்கைக்கான தகுதிகளில்  விதிகள் தளர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது” . பல வாரியங்களால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஓரளவு ரத்து செய்யப்பட்டதால், இந்த முறை ஜே.இ.இ (மேம்பட்ட) 2020 தகுதி வாய்ந்த மாணவர்களுக்கான தகுதி அளவுகோலை தளர்த்த கூட்டு சேர்க்கை வாரியம் (ஜேஏபி) முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் ஐ.ஐ.டி. மற்றும்  பி.டெக் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான தகுதி அளவுகோலை அவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்வில் தேர்ச்சியை அடிப்படையாக வைத்தே இருக்கும் … Read more

கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்.! 

சிபிஎஸ்இ பாடத்திட்டம் குறைப்பு குறித்து மாணவர்களின் எதிர்காலமான கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தி உள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடுகள் எதிர்கொண்டு வரும் சூழலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பாடத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பாடத்திட்டங்களில் 30 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரிவால் அறிவித்தார். அதாவது முக்கியமான உள்ளடக்கங்களை மட்டும் வைத்து கொண்டு பிற … Read more

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

9 முதல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை  மாற்றி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து … Read more

CBSE: பொதுத்தேர்வு 3,000 மையங்களுக்கு பதில் 15,000 மையங்களில் நடைபெறும்.!

நாடு முழுவதும் நடைபெற உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 15,000 மையங்களில் நடைபெறும். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என மத்திய மனித மேம்பாட்டுவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருந்தார்.  இதையடுத்து, சிபிஎஸ்இ தேர்வுகள் … Read more

விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக 3,000 பள்ளிகள் தேர்வு – அமைச்சர்

சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  சிபிஎஸ்இ விடைத்தாள்களை திருத்தும் பணிக்காக நாடு முழுவதும் 3,000 பள்ளிகள் தேர்வு செய்துள்ளோம் என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி விடைத்தாள்களை இந்த மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி சுமார் 50 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் … Read more