இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேசம் செல்கிறார்: குடியரசுத்தலைவர்..!

இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேச பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு மாளிகை அறிவித்துள்ள அறிவிப்பின்படி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நவம்பர் 24 ஆம் தேதி அன்று சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள உள்ளார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். மேலும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஹர்கோர்ட் பட்லர் … Read more

கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள், கொரோனா பாதிப்பால் கடந்த 18 மாதங்களாக நாட்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்படைந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு வழிகளில் முயற்சி செய்வதாகவும், அது மட்டுமல்லாமல் இந்த கொரோனா … Read more

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குடியரசு தலைவர்….!

பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியத்துடன் … Read more

இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்றவுள்ளார்..!

இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் இன்று மாலை 7 மணியளவில் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்படும். இதனை அடுத்து ஆங்கிலத்தில் இவரது உரை ஒளிபரப்பப்படும்.  இதனை தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய … Read more

முதலில் அவர்களுக்கு வணக்கம் செலுத்துங்கள் – ராம்நாத் கோவிந்த்

வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான பாதை தொடக்கத்தில் தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும். பரந்த மக்கள்தொகை கொண்ட நாட்டை உணவு தானியங்கள், பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறச்செய்துள்ளனர். இயற்கை இடர்பாடுகள், கொரோனா தொற்று என பல சவால்களை எதிர்கொண்டு உற்பத்தியை தக்கவைத்தனர். வேளாண் சட்டம் போன்ற சீர்திருத்தத்திற்கான … Read more

#BREAKING: உயர் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகள் நியமனம்.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்.!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்ததற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி கண்ணம்மாள், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியன் ஆகியோர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்தநாள் : டெல்லியிலுள்ள நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை!

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியிலுள்ள அவரது  நினைவிடத்தில் குடியரசு தலைவர் மலர் தூவி மரியாதை. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என அழைக்கப்படக்கூடிய இந்திய விடுதலை போராட்ட வீரர் ஆகிய அன்பு தந்தை காந்தியடிகள் அவர்கள் மகாத்மா காந்தி என அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்தியாவிற்கு விடுதலை பெற்றுத் தந்ததில் முக்கிய காரணமாக இருக்கும் அவர் இந்தியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். போர்பந்தரில் அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்த இவருக்கு இன்றுடன் 151 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. … Read more

ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்த்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் – ஓ.பன்னீர்செல்வம்!

ஜனாதிபதி ஸ்ரீ.ராம் நாத் கோவிந்த்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வாழ்த்தியுள்ளார். பாஜக கட்சியினை சேர்ந்த ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக தற்பொழுது பணியாற்றி வருகிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி1945 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றுடன் 75 வயது ஆகிறது. இந்நிலையில் இவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் துணை முதல்வராகிய ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது … Read more

பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலின்.!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்த மு.க.ஸ்டாலின். முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இவரது உடல்நிலை குறித்து கூறிய மருத்துவமனை நிர்வாகம், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் … Read more

வழக்கறிஞர் ஆர்.சுதா தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமனம்!

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வழக்கறிஞர் ஆர். சுதா நியமிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அவர்கள் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி அவர்கள் கொடுத்துள்ள அனுமதியின் பெயரில், தமிழக மகிளா காங்கிரஸ் கமிட்டி தலைவராக வழக்கறிஞர் ஆர்.சுதா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி  வேணுகோபால் அவர்கள் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளார். மேலும் லட்சத்தீவு … Read more