இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்றவுள்ளார்..!

இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 7 மணியளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் இன்று மாலை 7 மணியளவில் முதலில் இந்தியில் ஒளிபரப்பப்படும்.

இதனை அடுத்து ஆங்கிலத்தில் இவரது உரை ஒளிபரப்பப்படும்.  இதனை தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை இரவு 9.30 மணியளவில் பிராந்திய அலைவரிசைகளில் அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

அதேபோல், இன்று இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு தேநீர் விருந்து அளிக்க உள்ளார். இந்த விருந்து புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது.