சென்னை ராயபுரத்தில் குக்கர் கடையில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை ராயபுரத்தில் உள்ள குக்கர் கடையில் தேர்தல் பார்வையாளர்களுடன் வருமான வரி அதிகாரிகள் இணைந்து சோதனை.

பெட்ரோல், டீசல், மதுபானம் ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி வேண்டும்!

பெட்ரோல், டீசல், மதுபானம் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் – டெல்லியில் மாநில அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கான தண்டனை வரும் 16இல் அறிவிப்பு!

நிலக்கரி முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கான தண்டனை வரும் 16இல் அறிவிப்பு சிறு வயதில் இரு மகள்களும், உடல்நலப் பிரச்னை இருப்பதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என மதுகோடா தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை

தமிழகம், உள்ளிட்ட 12 மாநிலங்களில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

தமிழகம், ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணியை தொடர வேண்டும் எனவும் உத்தரவு.

எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி. சிறப்பு நீதிமன்றம் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை மட்டுமே விசாரிக்கும்.

12 மணிவரை 39 சதவீத வாக்குபதிவு : குஜராத் தேர்தல் களம்

குஜராத்தில் இறுதி கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இல்லாத பரபற்பப்பை தற்போது கூட்டிவருகிறது. அனைத்து வாக்குசாவடிகளிலும் போலிஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு கண்காணிக்கபடுகிறது. இந்நிலையில் தற்போது 12 மணிவரை நடந்த வாக்குபதிவில் 39 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. இதுவரை நடந்த வாக்குபதிவுகள் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டமாக நடந்த வாக்குபதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 18ஆம் தேதி நடக்க உள்ளது.

காவல் ஆய்வாளர் உடலுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அஞ்சலி!

விமான நிலையத்தில் உள்ள பெரிய பாண்டியனின் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அஞ்சலி. * கையில் கருப்புப்பட்டை அணிந்த வண்ணம் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அஞ்சலி.

முதல்வர் ,துணை முதல்வர் விமான நிலையம் வருகை!

விமான நிலையத்தில் உள்ள பெரிய பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வருகை

இறுதிகட்ட தேர்தல் : பரபரப்பான வாக்குபதிவுடன் குஜராத் தேர்தல் களம்

22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியில் செயல்பட்டு வரும் குஜராத் மாநிலத்தில் தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்நிலையில் அடுத்து இறுதிகட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 14) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இன்று மொத்தம் உள்ள 182 தொகுதியில் மீதம் உள்ள 93 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. … Read more

ஜெயலலிதாவுடன் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும்!

ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் இருந்த அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது ஜெயலலிதா வீட்டில் இருந்த ஒரு நபர் பல்வேறு தகவல்களை எங்களுக்கு தந்துள்ளார் தீபா