#BREAKING : தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடைசெய்ய மசோதா..?

அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்ய புதிய மசோதா  தாக்கல் செய்யப்படவுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம் கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை விதிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்திற்கான கட்டமைப்பை ரிசர்வ் வங்கி … Read more

புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் விவசாயிகள்…!

புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராட்ட நடத்தி வருகின்றனர். மத்திய அரசிற்கும், விவசாயிகள் அமைப்பிற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என … Read more

நேபாள் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பை இழந்தார் பிரதமர் ஓலி !

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியால் பிரதமர் பதவி ராஜினாமா செய்தார் கே.பி. ஓலி. நேபாளத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த மாவோயிஸ்ட் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது.இதனையெடுத்து திங்கள்கிழமை நேபாள பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் பிரதமர் கே.பி. சர்மா ஓலி க்கு 93 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர், மேலும் 124 பேர் எதிராகவும், 15 பேர் நடுநிலையாகவும் இருந்தனர், இதனால் பிரதமர் ஓலி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவினார். மேலும் சபையில் … Read more

இன்று தொடங்குகிறது கூட்டத்தொடர் ! 16 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.அதாவது வேளாண் சட்டங்களை மத்திய அரசு … Read more

முடிந்ததா??மழைக்கால கூட்டத்தொடர்!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  திட்டமிட்டத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக முடிவடைந்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த 14 ந்தேதி கூடியது.சூழற்சி முறையில் கூட்டத்தொடரானது காலை மக்களவை பிற்பகலில் மாநிலங்களவை என்று கூடியது.இந்நிலையில் வேளாண் மசோதா,12 எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு,புத்தகத்தை கிழித்த நிகழ்வுகள் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் இதை கண்டித்து எதிர்கட்சிகள் அமளி என்று நாடளுமன்ற கூட்டத்தொடர் ஆனது 10 நாட்கள் நடைபெற்ற நிலையில்  அவையில் … Read more

10 நாட்களில் நிறைவடைந்த ராஜ்யசபா கூட்டத்தொடர்.! தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

இன்றுடன் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. இதில், வேளாண் மசோதா தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் எதிர்கட்சியினர் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மூன்றரை … Read more

இந்தியர்கள் விசா இல்லாமல் இந்த 16 நாடுகளுக்கு செல்லலாம் – மாநிலங்களவையில் அமைச்சர் விளக்கம்.!

16 நாடுகள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நுழைவை வழங்குகின்றன என்று மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று நடைபெற்ற மாநிலங்களவையில் இந்தியர்களுக்கான விசா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஈரான், இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட … Read more

மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!

சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ். மாநிலங்களவையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், … Read more

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு.!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரித்தார் வெங்கையா நாயுடு. மாநிலங்களவை விதிகளின் படி ஹரிவன்ஷ்க்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக … Read more

மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி – வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை.!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது … Read more