முடிந்ததா??மழைக்கால கூட்டத்தொடர்!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  திட்டமிட்டத்திற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக முடிவடைந்துள்ளது.

கொரோனா பரவல் காலத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரானது முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த 14 ந்தேதி கூடியது.சூழற்சி முறையில் கூட்டத்தொடரானது காலை மக்களவை பிற்பகலில் மாநிலங்களவை என்று கூடியது.இந்நிலையில் வேளாண் மசோதா,12 எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு,புத்தகத்தை கிழித்த நிகழ்வுகள் உட்பட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் இதை கண்டித்து எதிர்கட்சிகள் அமளி என்று நாடளுமன்ற கூட்டத்தொடர் ஆனது 10 நாட்கள் நடைபெற்ற நிலையில்  அவையில் கலந்து கொண்ட அமைச்சர் நிதின் கட்கரி உள்பட 25 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் ஆக்.1 வரை நடக்க இருந்த இக்கூட்டத்தொடர் ஆனது உறுப்பினர்களின் பாதுகாப்பு நலன் கருதி முன் கூட்டியே  முடித்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இக்கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் 25 மசோதாக்கள்  நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha