ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பீகாரில் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என முதல்வர் ட்வீட். பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து நடந்த திடீர் அரசியல் திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்வெளியேறியதால், முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்று பீகார் ஆளுநர் பகு சவுகானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதன்பின், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் … Read more

#BREAKING : பரபரப்பு – பீகார் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு…!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து  கொண்ட ஜான்சபா என்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு. பீகாரில், நாளந்தாவில் நடைபெற்ற ஜான்சபா என்ற நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, விழா மேடை அருகிலேயே நாட்டு வெடிகுண்டு விசப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். வெடிகுண்டு வீச்சு தொடர்பாக போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய நிலையில், தற்போது மீண்டும் வெடிகுண்டு … Read more

பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தாக்கிய நபர் கைது …!

பக்தியார்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த பீகார் முதல்வரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள பக்தியார்பூர் எனும் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவரை சுற்றி பாதுகாப்புக்காக காவலர்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் நிதிஷ்குமார் மேடையில் ஏறி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளார். மலர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மேடையில் … Read more

பீகார் சட்டசபை வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது வெட்கக்கேடானது – தேஜஸ்வி யாதவ்!

பீகார் சட்டசபை வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது வெட்கக்கேடானது என அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் முதல்வரின் அறையில் இருந்து சில தொலைவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலியான வெவ்வேறு ப்ராண்டுகளுடைய மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இந்த காலி மதுபாட்டில்கள் முதல்வரின் அறைக்கு அருகில் கிடந்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள … Read more

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும் – உச்சநீதிமன்றம்

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐவிடம் ஒப்படைக்கப்படும். நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில்,  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சுசாந்த் சிங் இறந்த போது, அவருடைய வீட்டில் அவருடன் நண்பர்களும் இருந்ததால், அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் நாளுக்கு நாள், பல … Read more

தேர்தலில் கவனம் வேண்டாம்,கொரோனாவில் தான் கவனம் வேண்டும் – பிரசாந்த் கிஷோர் வேண்டுகோள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்,தேர்தல் நடத்துவதில் வேண்டாம் என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் கட்சியில் பிரசாந்த் கிஷோர் துணைத் தலைவராக இருந்து வந்தார்.ஆனால் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதலால் அவர் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டார் . வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது. இருப்பினும் … Read more

ஓடிடி தளங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்! பிரதமருக்கு பீகார் முதலமைச்சர் கடிதம்!

வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உலா வரும் இடமாக இணையதளம் அமைந்துள்ளது. இந்த இணையதளம் மூலம் பல நல்ல விடயங்களை கற்றுக் கொண்டாலும், மக்களின் வாழ்வில் சீர்கேடுகளை ஏற்படுத்தும் பல கெட்ட விடயங்களும் உலா வருகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டா ஸ்ட்ரீமிங் வலைத்தளங்களில் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களில் அதிகமாக வன்முறையும், ஆபாசமும் இருக்கிறது. … Read more