சென்னை – கரூர் – திருச்சி என அடுத்தடுத்து போலீஸ் காவலில் முகிலன்!

பிப்ரவரி மாதம் சென்னையில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன், அண்மையில் திருப்பதியில் கண்டுபிடிக்கபட்டார். பிறகு இவர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்க பட்டார், பிறகு அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு இவர் மீது கரூரில் ஓர் பெண் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி, ஜூலை 24வரை நீதிமன்ற காவலில் வைக்க … Read more

முகிலனுக்கு நெஞ்சுவலி! சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுகிறார்!

சில மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போன முகிலன் திருப்பதி போலிஸாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றமும் சுமத்தப்பட்டிருந்ததாலும், இவரை காணவில்லை என சிபிசிஐடி தேடிவந்தாலும் இவர் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் இன்று விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகிலனுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள், சர்க்கரை நோய் மற்றும் சில உளவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆதலால், தற்போது … Read more

முகிலனை டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது – காவல்துறையிடம் மருத்துவர்கள் பதில்!

140 நாட்களுக்கு பின் சென்னை வந்த முகிலன் அவர்களது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிமதிக்கபட்டார்.அவரை எப்பிடியாவது கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் செயல்படும் வேளையில், முகிலனை மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் நேற்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல் துறையினர்  குடிநீர் கூட குடுக்காமல் தன்னை மிகவும் … Read more

‘அணுக்கழிவு மையத்தை அமைக்காதே’! ரயிலை மறித்து முழங்கிய முகிலன்!

சில மாதங்களுக்கு முன்னர் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய்விட்டார். அதன் பின்னர் அவரை காணவில்லை என ஆட்கொணர்வு மனுக்கள் அனுப்பப்பட்டன. இணையதளத்தில் முகிலன் எங்கே என்ற கேள்வி அதிகமாக ஒலித்தது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு திருப்பதி ரயில் நிலையத்தில் போலீஸ் அவரை பிடித்து செல்லுவது போலவும், அவர் அழிக்காதே அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என கோஷமிட்டு கொண்டே … Read more

முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை – என்னிடம் பேசவில்லை – முகிலனின் மனைவி பூங்கொடி தகவல் !

சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார். முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 4 மாதத்திற்கு மேலாக காணாமல் போய் இருந்த சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டார். நாளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் நிலையில், இன்று மாலை கரூர் மாவட்ட காவல்துறையால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகிலனை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி … Read more

‘கூடங்குளத்தில் அணுகழிவு மையத்தை அமைக்காதே!’ ஆந்திர போலீசார் பிடியிலும் கோஷமிட்டு செல்லும் முகிலன்!

சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னை ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போய் மாதங்கள் கடந்துவிட்டன. சமூக வலைத்தளங்களிலும் பல முறை முகிலன் எங்கே என்ற கேள்விகளும் ஏராளமாய் ஒலித்தன. இந்நிலையில் இவரது நண்பர் சண்முகம் என்பவர், ‘ தான் திருப்பதிக்கு செல்கையில் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் ஆந்திர போலீசார் பிடியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அழிக்காதே  அழிக்காதே தமிழகத்தை அழிக்காதே! கூடங்குளத்தில் அணு கழிவு மையத்தை அமைக்காதே! தமிழ்நாட்டை அழிப்பது நியாமா!’ என ஓங்கி … Read more