முகிலனை டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது – காவல்துறையிடம் மருத்துவர்கள் பதில்!

140 நாட்களுக்கு பின் சென்னை வந்த முகிலன் அவர்களது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிமதிக்கபட்டார்.அவரை எப்பிடியாவது கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினர் செயல்படும் வேளையில், முகிலனை மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் நேற்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது காவல் துறையினர்  குடிநீர் கூட குடுக்காமல் தன்னை மிகவும் … Read more

முகிலன் தெளிவான மனநிலையில் இல்லை – என்னிடம் பேசவில்லை – முகிலனின் மனைவி பூங்கொடி தகவல் !

சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் தெளிவான மனநிலையில் இல்லை என்று அவரது மனைவி பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார். முகிலன் என்னிடம் எதுவும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 4 மாதத்திற்கு மேலாக காணாமல் போய் இருந்த சமூக ஆர்வலர் முகிலன் அவர்கள் இன்று சென்னை கொண்டு வரப்பட்டார். நாளை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தும் நிலையில், இன்று மாலை கரூர் மாவட்ட காவல்துறையால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகிலனை சந்தித்த அவரது மனைவி பூங்கொடி … Read more

முகிலனை மீண்டும் கைது செய்தது காவல் துறை – பாலியல் வழக்கில் கைது

சமூக ஆர்வலர் முகிலனை பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தற்போது மீண்டும் காவல்துறை கைது செய்துள்ளது. கரூரை சேர்ந்த பெண்மணி குடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு வழக்கில் அரசுக்கு எதிராக முகிலன் அவர்கள் ஆதாரங்களை திரட்டிய நிலையில், கடந்த பிப்ரவரி மதம் முதல் காணாமல் போனார். சுமார் 140 நாட்களுக்கு பின்னர், நேற்று இரவு திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி காவல் துறையினர் காட்பாடி வழியாக சென்னை அழைத்து வந்தனர். சிபிசிஐடி … Read more

சமூக ஆர்வலர் முகிலன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார் – சிபிசிஐடி போலீஸ் தகவல் !

ஸ்டெர்லைட் வழக்கில் அரசுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்தார் சமூக ஆர்வலர் முகிலன். திடீரென கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போனார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பலரும் தேடிவந்த நிலையில், 140 நாட்களுக்கு பின் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவர், காலை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் … Read more

முகிலன் குறித்து தகவல் கிடைத்துள்ளது – சிபிசிஐடி விளக்கம்!

சமூக ஆர்வலர் முகிலன் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனை வெளியிட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்று சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். சமூக ஆர்வலர் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் திடீரென காணாமல் போனார்.அவரை கண்டுபிடித்து தரக்கோரி  மனித உரிமை அலுவலர் ஹெண்ட்ரி திபேன் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். முகிலன் மாயமாகி 112 நாட்கள் ஆனா நிலையில் அவரது விசாரணை எந்த நிலையில் என்று அந்த மனுவில் கூறப்பட்டு … Read more

முகிலன் குறித்து துப்பு கிடைத்துள்ளது!ஆனால் தகவலை வெளியே கூற முடியாது -உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐடி போலீசார் தகவல்

முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக செயற்பாட்டாளர் முகிலன்  பிப்ரவரி 15-ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார். அன்று இரவிலிருந்து அவரைக் காணவில்லை. எனவே காணாமல் போன முகிலன் குறித்து ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இவரது மனுவிற்கு சிபிசிஐடி போலீசார் இன்று பதில் அளித்தனர்.அதில் முகிலன் வழக்கில் துப்பு கிடைத்துள்ளது.காணாமல் போன முகிலன் குறித்த தகவலை வெளியே … Read more