சமூக ஆர்வலர் முகிலன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார் – சிபிசிஐடி போலீஸ் தகவல் !

ஸ்டெர்லைட் வழக்கில் அரசுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருந்தார் சமூக ஆர்வலர் முகிலன். திடீரென கடந்த பிப்ரவரி மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரயில் பயணித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போனார். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பலரும் தேடிவந்த நிலையில், 140 நாட்களுக்கு பின் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்று சென்னை கொண்டுவரப்பட்ட அவர், காலை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை காண அவரது மனைவி உட்பட பலர் வந்தனர். இந்நிலையில், நாளைய தினம் சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளார் என்று சிசிபிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.