முகிலனுக்கு நெஞ்சுவலி! சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுகிறார்!

சில மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போன முகிலன் திருப்பதி போலிஸாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றமும் சுமத்தப்பட்டிருந்ததாலும், இவரை காணவில்லை என சிபிசிஐடி தேடிவந்தாலும் இவர் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவர் இன்று விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகிலனுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள், சர்க்கரை நோய் மற்றும் சில உளவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆதலால், தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை போலீசார் கூட்டி செல்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.