காணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..!

13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் … Read more

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.  தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி … Read more

காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல்..!-3 பேர் படுகாயம்..!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் புல்வாமா சவுக் பகுதியில் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால்  வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்களில் … Read more

ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை மீது தீவிரவாதிகள் தாக்குதல்..!

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒரு போலீஸ்காரர் காயமடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் இன்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹ்மத் பல புல்லட் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், பகல் 1.35 மணியளவில், பயங்கரவாதிகள் கன்யார் பகுதியில் உள்ள போலீஸ் நாகா பார்ட்டி மீது துப்பாக்கிச் சூடு … Read more

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் 4 பேர் உயிரிழப்பு..!-ஒருவர் மாயம்..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவில் மேகம் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவரை காணவில்லை. ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் டாங்கிவாச்சியின் மேல் பகுதியில் மேகம் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதில் சிக்கிய ஐந்து பேரின் குடும்பம் ரஜோரியில் உள்ள கல்சியான் நவ்ஷேராவில் வசித்து வருபவர்கள். இந்த மேக வெடிப்பில் முகமது தாரிக் காரி (8), ஷாஹனாசா பேகம் (30), நாஜியா அக்தர் (14), ஆரிஃப் ஹுசைன் காரி (5)  ஆகியோர் உயிரிழந்துள்ளனர். … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசி தாக்குதல்..!சி.ஆர்.பி.எஃப் வீரர் காயம்..!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி கையெறிகுண்டு வீசியதில் சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் சன்போரா அருகே பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் ஒரு பெண் லேசான காயமடைந்தனர். சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது படி, அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி சாலை திறப்பு விழாவிற்கு (ஆர்ஓபி) நிறுத்தப்பட்டுள்ள 29 பட்டாலியனின் துருப்புக்களை குறிவைத்து கையெறி குண்டுகளை வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர் … Read more

எல்லையில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

பூஞ்ச் மாவட்டத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுகொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர்  கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் நடக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இருவரிடமிருந்தும் 2 ஏகே 47 ரக  … Read more

#Breaking:விபத்துக்குள்ளான இந்திய ராணுவ ஹெலிஹாப்டர்..!

ஜம்முவின் கதுவாவில் உள்ள ரஞ்சித் சாகர் அணை அருகே இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஜம்முவில் உள்ள கத்துவில் உள்ள ரஞ்சித் சாகர் அணை அருகே இந்திய இராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு NDRF குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக வெளியான ராணுவ ஆதாரங்களின்படி,ரஞ்சித் சாகர் அணையில் விபத்துக்குள்ளான ராணுவ விமானப் போக்குவரத்து ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர் விமானிகள் இருவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் … Read more

நாளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்..!

நாளை இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டுடன் நடந்த கார்கில் போர் நினைவு தினம் ஜூலை 26 அன்று கார்கில் நினைவிடத்தில் நடக்க உள்ளது. அதனால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு 22 ஆவது கார்கில் போர் நினைவு தினமான ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் … Read more

இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய ட்விட்டர் நிறுவனம்..!

சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தில் காஷ்மீர், லடாக் பகுதியை தூக்கிய செயலுக்கு பெரும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை தனி நாடாக அதில் காட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனம் இந்திய வரைபடத்தை இதற்கு முன்னரும் தவறாக காண்பித்து மோதல் நிலவி வந்தது. அப்போது இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக் பகுதியை சீனாவின் பகுதியாக காண்பித்திருந்தது. … Read more