ஜல்லிக்கட்டு நடத்த தடைகோரி மனு – பரிசீலிக்க உத்தரவு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு. திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கூடாது எனக்கோரிய மனுவை பரிசீலித்து ஆணையிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அலகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி மனு மீது திருப்பூர் ஆட்சியர், தமிழ்நாடு அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு … Read more

அதிகாரிகளை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது? – ஐகோர்ட் கிளை

ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார். ஆக்கிரமிப்பை அகற்றும் உத்தரவை அமல்படுத்தாத அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட கூடாது என உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. சென்னை எருக்கஞ்சேரியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை அகற்றக்கோரி ரவீந்தர ராம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற 2020-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை … Read more

#BREAKING: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை விசாரிக்க தடை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001-06ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு … Read more

வாரிசுகளுக்கு மகிழ்ச்சி செய்தி.! கொடுத்தது கொடுத்ததுதான்.. NO ரிடடர்ன்.! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு.!

கொடுத்த சொத்தை பெற்றோர் திரும்பப் பெற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. ஒருமுறை வழங்கிய சொத்தை பாதுகாவலர் (கார்டியன்) திரும்ப பெற முடியாது என வாரிசுகளுக்கு வழங்கும் சொத்து தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு, நலச் சட்டத்தின் கீழ், மாற்றப்பட்ட சொத்தில் வழங்குபவரை கவனிக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை என்றால், சொத்தை திரும்பப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு … Read more

ஈஷா மையத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் … Read more

உரிய நேரத்தில் ஜீவனாம்சம், இல்லையெனில் கடும் நடவடிக்கை – ஐகோர்ட் உத்தரவு

ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. ஜீவனாம்சம் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜீவனாம்சம் வழங்க தவாறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி விவாகரத்து கோரி சேலம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நிலுவையில் உள்ள … Read more

வழக்கை இழுத்தடித்தால் அதிகபட்ச அபராதம் – ஐகோர்ட் எச்சரிக்கை

வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என நீதிபதி கருத்து. வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வழக்கை இழுத்தடிக்கும் வகையில் தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், வழக்கு தாமதத்தால் நீதி பரிபாலன முறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். … Read more

பொங்கல் பரிசு: முன்கூட்டியே தகவல் தர இயலாது – தமிழக அரசு!

பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கில், பொங்கல் பரிசு தொகுப்பு அரசின் கொள்கை ரீதியிலான முடிவு, வழக்குக்காக முன்கூட்டியே தகவல் தர இயலாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த சுந்திர விமலநாதன் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். தமிழ்நாடு … Read more

LGBTQIA குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி – தமிழக அரசு

மருவிய பாலினத்தவர் மற்றும் எல்ஜிபிடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி. LGBTQIA மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றமதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருவிய பாலினத்தவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் கொள்கை இன்னும் 3 மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் எனவும் … Read more

‘காவி அணிவிக்க மாட்டேன்…’ – அர்ஜூன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல்!

அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு காவி சட்டை அணிவிக்க மாட்டேன் என அர்ஜூன் சம்பத் உத்தரவாதம். புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது புகைப்படத்திற்கு பட்டை – குங்குமமிட்டு, காவி உடை அணிந்தது போன்று போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில், காவி(ய) தலைவனின் புகழை போற்றுவோம் என்ற வாசகமும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து, … Read more