மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்துவது குறித்து விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் என்ற அறிவிப்பை ரத்து செய்து, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு … Read more

இபிஎஸ் விவகாரம்; ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – அறப்போர் இயக்கம்

பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என அறப்போர் இயக்கம் தகவல். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து நேற்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. … Read more

#BREAKING: அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை – நீதிமன்றம் உத்தரவு

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலை தொடர்ந்து அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையை காக்கும் விதமாக செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கோயில் … Read more

#BREAKING: முன்னாள் முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேச தடை – உயர்நீதிமன்றம்

டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்டஈடு தரக்கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பற்றி அவதூறாக பேச அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச தடைகோரி, எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்திருந்தார். அறப்போர் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது. … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் ஏன் முடக்கம்? – வருமான வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கமளித்துள்ளது. அதாவது, முன்னாள் அமச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில், பதில் மனுவை தாக்கல் செய்தது வருமான வரித்துறை. வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், அரசு நிதி செலுத்தப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தொகுதி செலவுக்காக பணம் எடுக்கப்படவில்லை. வரி பாக்கியில் 20%-ஐ … Read more

எஸ்பி வேலுமணி மீதான ஒரு வழக்கு ரத்து! ஆனால் இதை ரத்து செய்ய முடியாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஒரு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு பதிவு செய்யபட்டது. சென்னை, கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக ரூ.800 கோடி அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என  குற்றச்சாட்டப்பட்டது. இதுபோன்று எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து குவித்ததாகவும் … Read more

கோகுல்ராஜ் வழக்கு; ஐகோர்ட் கிளையில் இரண்டாவது முறையாக சுவாதி ஆஜர்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுவாதி ஆஜர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஆஜரானார். கடந்த 25-ஆம் தேதி சுவாதி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் இன்று மீண்டும் ஆஜரானார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வின் முன் சுவாதி ஆஜராகியுள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் கடந்த 25-ஆம் தேதி … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கில் இன்று தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு. தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எஸ்பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது சென்னை, … Read more

தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு!

எவ்வித காரணமும் இன்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்திவைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது என ஆளுநர் பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் பற்றியும் திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஆளுநர் பேசி வருகிறார். … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு – வருமான வரித்துறை பதில் தர உத்தரவு!

விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் நாளை விளக்கமளிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் நிலம், வங்கிக்கணக்கு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.206.42 கோடி வரிப்பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை … Read more