விவாகரத்து பெற்ற பெண் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு…!

மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் … Read more

65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்இலவசமாக படிப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் முதன்மை விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள தாலுகா குமரனபுரா கிராமத்தில் வசித்து வரக்கூடிய 65 வயதுடைய முதியவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணி.! 28 மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு.!

பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளது. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் 3 மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். ஆசிரியர்கள் தடுத்தும் இந்த மோதல் நடைபெற்றதால் கல்லூரியில் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் இந்த மோதலுக்கு காரணமான 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு … Read more

190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்- ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

லண்டனில் ரெய்ன்ஹார்ட் சினாகா என்பவர் பல ஆண்களை தொடர் பாலியல் வன்கொடுமைகளை செய்து, வந்ததால் அவரை கைது செய்யப்பட்டு, இங்கிலாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இவர் செல்ஃபோன் சார்ஜ் இல்லை, கால் டாக்ஸி புக் செய்ய முடியவில்லை, மது வாங்க காசு இல்லை என பப்புகளில் உதவிக்காக இருப்பவரை குறி வைத்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வாராம். இந்தோனேசியாவில் பிறந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் சினாகா 2007-ம் ஆண்டில் மாணவர் விசாவில் மான்செஸ்டருக்கு வந்துள்ளார். அவர் … Read more

மதத்தை பற்றி சர்ச்சை பதிவு.! மரண தண்டனை விதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர்.!

பாகிஸ்தானில் மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் மத விரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றமாகம். அது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிப்பது வழக்கம் ஆகும். பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மத விரோத சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டை பொறுத்தமட்டில் மத … Read more

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை விதிப்பு.!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி நகருக்கு உட்பட்ட பூட்டி பாஸ்தீ (Booty Basti) என்ற இடத்தில், கடந்த 2016-ம் ஆண்டு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அந்த பொறியியல் கல்லூரி மாணவி, அதே வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்நிலையில், … Read more

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு..!நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்..!

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கு தஞ்சாவூர் மாவட்டம் முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராவதிலிருந்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : வழக்கை ஜூன் 12க்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த பேர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர் மீது வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணைகள் உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின் உதகை நீதிமன்றம்  கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை ஜூன் 12க்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது,