65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்இலவசமாக படிப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் முதன்மை விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள தாலுகா குமரனபுரா கிராமத்தில் வசித்து வரக்கூடிய 65 வயதுடைய முதியவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப் பட்டது.

இதனையடுத்து அவர் ரங்கசெட்டி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உடல் நலக்குறைவால் முதியவர் உயிரிழந்தார். தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் மற்றும் இலவச படிப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

author avatar
Rebekal