கோடநாடு விவகாரம் – கார் உரிமையாளரிடம் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை தீவிரம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய காரின் உரிமையாளர்கள் உட்பட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காரின் உரிமையாளர் நவசாத், புரோக்கர் நவ்ஃபல் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை … Read more

கோடநாடு +சிறுதாவூர்க்கு சொந்தமான- 2,000 கோடிச்சொத்துக்களை முடக்கி..ஐடி நோட்டீஸ்

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோடநாடு எஸ்டேட் பங்களா சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை முடக்கியுள்ள வருமானவரித்துறையினர் அதற்கான நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு 187 இடங்களில் நடைபெற்ற அதிரடி வரிமானவரிச்சோதனைக்கு பிறகு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 1800 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டன.இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் லதா,கிராம அதிகாரி சத்யா ஆகியோருடன் அங்கு வருகை … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : வழக்கை ஜூன் 12க்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த பேர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர் மீது வழக்குகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரணைகள் உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இன்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின் உதகை நீதிமன்றம்  கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கை ஜூன் 12க்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது,