#BREAKING: கேரளாவில் ஒரே நாளில் 32,819 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

கேரள மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5170 ஆக அதிகரித்துள்ளது. தற்போது,  2,47,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,41,199 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 1,53,54,299 மாதிரிகள் பரிசோதனை … Read more

இந்தியாவிற்கு உதவ தைவான் தயாராக உள்ளது – அதிபர் சாய் இங்-வென்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் தைவான் துணை நிற்கிறது என்று அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினந்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா 2வது … Read more

உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது – உச்சநீதிமன்றம்

கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனா விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தொடர்பான விவகாரங்களை உயர்நீதிமன்றம் விசாரிப்பதை தடுக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், நாங்களும் அமைதியாக … Read more

#breaking: கொரோனா பரவல் – பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!!

கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்.  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ரதீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் முழு பொது முடக்கம் வருமா? அல்லது … Read more

இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி – சிஇஓ, சுந்தர் பிச்சை

இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடியை சமாளிக்க கூகுள் நிறுவனம் நிதியுதவி வழங்குவதாக சிஇஓ, சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are … Read more

#BREAKING: வரும் 26ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அறிவிப்பு

வருகிற 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தொற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று … Read more

இந்த சுமை மக்களைத்தான் பாதிக்கும்..முழு உரடங்கிற்கு வாய்ப்பிருக்காது என நம்புவோம் – முக ஸ்டாலின்

தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம் என்றும் பக்கபலமாக நிற்போம் எனவும் கூறி, முக ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது. ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் … Read more

அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது – கமல் காட்டம்!

மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என கட்டமாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, பூமியை மீட்போம் என்கிற கோஷத்தோடு … Read more