தமிழகத்தில் கொரோனாவிலிருந்து இன்று 5,717 பேர் குணமடைந்தனர்.!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,717 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,47,366பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 5,693 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,381 … Read more

தமிழகத்தில் இதுவரை 4,10,116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,930 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக 5,776 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,69,256 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5,930 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,10,116 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கொரோனாவால் இன்று 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,925 ஆக … Read more

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில்,கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 6,006 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,68,141 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை … Read more

தமிழகத்தில் ஓரே நாளில் 6,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.!

தமிழகத்தில் இன்று ஓரே நாளில் 6,406 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று புதிதாக 6,495 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,22,085 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 6,406 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,62,133 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் மேலும் 94 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை … Read more

உலகளவில் 1.13 கோடி பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

உலகம் முழுவதிலும் 1 கோடிக்கும்  மேற்பட்டோருக்கு  கொரோனா அவர்களில் 1 கோடி 13 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8,026,722 ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 6,88,984 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து இதுவரை  11,334,985 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனையில் 6,002,753 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த விஷால் பட நடிகை .!

கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஐஸ்வர்யா அர்ஜூன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், மீண்டும் வந்துள்ளனர்.அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள், விஷால் மற்றும் அவரது தந்தை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஷன் … Read more

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த நடிகர் அர்ஜூனின் மருமகன்.!

கொரோனாவிலிருந்து துருவ் சார்ஜா மற்றும் அவரது மனைவி மீண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளார் கன்னட நடிகரும், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரரான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ் அறிவித்திருந்தார். இவர் நடிகர் அர்ஜுனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் துருவ அறிவித்துள்ளார். அதனுடன் … Read more

நாகலாந்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா, 660ஆக உயர்ந்த கொரோனா தொற்று எண்ணிக்கை.! 

நாகலாந்தில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 660ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். மேலும், சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களில் 291 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதை அடுத்து, அதில் புதிதாக 3 பேருக்கு … Read more

கொரோனாவிலிருந்து குணமடைந்த ராகவா லாரன்ஸ் டிரஸ்ட் குழந்தைகள்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டில் உள்ள குழந்தைகள் குணமடைந்து திரும்பியதாக தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த நாள் முதல் பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிதியுதவி வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தாய் என்ற அமைப்பின் மூலம் பலருக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவுகிறார். இதற்காக பலர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் அசோக் நகரில் இவர் … Read more

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கொரோனாவில் இருந்து மீண்டார்.!

சீனா உஹான் நகரில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 190 நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து நாடுகளும் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 935,957 ஆக அதிகரித்து, பலியின் எண்ணிக்கை 47,245 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 194,286 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. … Read more