#Breaking: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை.. 2-வது முறையாக ரத்து!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். பிரெக்ஸிட் கூட்டமைப்பு நாடுகளின் பயணத்திற்கு பிறகு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் முக்கியமான பயணம் என்று இப்பயணம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

எனது நண்பன் மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்தேன்- போரிஸ் ஜான்சன்

எனது நண்பர் பிரதமர் மோடியின் அன்பான அழைப்பின் பேரில் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கு ஆவலாக இருந்தேன். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பங்கேற்க முடியவில்லை. இந்தியா முழுவதும் இன்று 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் மக்களுக்கு குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இந்த குடியரசு தினவிழாவையொட்டி இந்திய மக்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இணையப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். … Read more

இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்! பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை!

பல விதமான கடுமையான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று இங்கிலாந்து பிராத்தமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, போன்ற நாடுகள் உள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அதிகம் வீரியமிக்க புதிய வகை வைரஸ் அங்கு … Read more

விவசாயிகள் பிரச்சினையா? அல்லது இந்தியா – பாக் பிரச்சினையா? குழம்பிய இங்கிலாந்து பிரதமர்!

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியா – பாக் பிரச்சனை என பேசியுள்ளது, சர்ச்சைக்குள்ளானது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லியில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இந்த போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை இந்திய பிரதமர் … Read more

“குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா?”- பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுவன்!

கொரோனா பரவும் சூழலில், குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா? என பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதமெழுதியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸில் தாக்கம் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பண்டிகைகளை கொண்டாடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கவுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேள்விக்குறியானது. மேலும், இந்த பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என பல நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் 8 … Read more

இங்கிலாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலை.. எச்சரிக்கைக்கும் போரிஸ் ஜான்சன்.!

இங்கிலாந்தில் கொரோனாவால் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 45,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் பின்பற்றிவரும் நடைமுறைகளை ஒருபோதும் கைவிடக்கூடாது. தற்செயலாக கூட கொரோனா பரவ நாம் அனுமதிக்கக்கூடாது. விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இரண்டாவது அலை உருவாகலாம் என்பதால் நாமும் கவனமாக இருப்பது அவசியம் என்றார். … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இங்கிலாந்து இயல்பு நிலை திரும்பும் – போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரஸ் காரணாமாக அதிகம் பாதித்த நாடுகளில்  இங்கிலாந்து உள்ளது. இதுவரை இங்கிலாந்தில் ,2,94,066 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 45,000-க்கும்  மேற்பட்டோர் உயிழந்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், அடுத்து வரும் மழைக்காலத்தில் கொரோனா 2-வது அலை ஏற்பட வாய்ப்பு என்பதால், சுகாதார திட்டத்திற்கு 3 பில்லியன் பவுண்டுகளை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் முதல் தேசிய … Read more

விரைவில் துரித உணவுகளுக்கு தடையா.?! இங்கிலாந்து பிரதமரின் அதிரடி திட்டம்.!

பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில், விரைவில் துரித உணவுகளுக்கு தடை விதிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது, சில நோயாளிகள் துரித உணவுகளை (Junk … Read more

“Don’t worry” நான் கையை கழுவிட்டேன்.! நக்கலாக கலாய்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன்.!

உணவகத்திற்கு சென்று வரும் பொழுது நலம் விசாரிக்க வந்த பெண்ணிடம்  கைகுலுக்குவதைத் தவிர்த்தார் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகளவில் பரவி வருகிறது இந்த வைரஸ் முதலில் பரவியபோது முன்னெச்சிரிக்கயாக கை கழுவதல் முகக்கவசம் அணிதல் என  நிறைய பின் பற்ற வேண்டிய கட்டாயம் உண்டாகியது அந்த வகையில் லண்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கிழக்கு லண்டனில் உள்ள பிஸ்ஸா யாத்ரீகர்கள் உணவகத்திற்கு அதிபர் ரிஷி சுனக் உடன் வந்திருந்தார் அப்போது திரும்பி செல்லும்போது … Read more

ஜூன் 1-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த – போரிஸ் ஜான்சன்.!

இங்கிலாந்தில் ஊரடங்கை  ஜூன் 1-ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 4,181,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,83,868 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 1,493,416 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இங்கிலாந்தில், கொரோனா தொற்றால் சுமார் 21,9,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 31,855 ஆக அதிகரித்துள்ளது. … Read more