இதை செய்தால் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ! – அரவிந்த் கெஜ்ரிவாலின் முக்கிய அறிவிப்பு

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 200 யூனிட் வரை மட்டும் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இல்வச மின்சாரம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். 201-400 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதி கட்டணம் (50%) மட்டுமே வசூலிக்கப்படும்  என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த சலுகைகளை வாடகை வீட்டினருக்கு கிடைக்காமல் இருந்தது. வாடகை வீட்டினர்கள் ரூ3000 செலுத்தி பிரீபெய்ட் மீட்டர்களை பொருத்தினால் 200 யூனிட் வரை முற்றிலும் இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

மார்ச் 1 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதம்!! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அந்தஸ்து கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போகிறார்.  மார்ச் 1 முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.  பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார். ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த … Read more

மோடியும்,அமித்ஷாவும் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள்- டெல்லி  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால்

பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும், அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள் என்று டெல்லி  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்தார் .இந்த அழைப்பை ஏற்று நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக … Read more

இரண்டாவது நாளாக தொடரும் கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம்.!கவர்னர் வீட்டில் பரபரப்பு ..!

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார். இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனால், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. … Read more