இதை செய்தால் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் ! – அரவிந்த் கெஜ்ரிவாலின் முக்கிய அறிவிப்பு

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 200 யூனிட் வரை மட்டும் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இல்வச மின்சாரம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். 201-400 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு பாதி கட்டணம் (50%) மட்டுமே வசூலிக்கப்படும்  என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த சலுகைகளை வாடகை வீட்டினருக்கு கிடைக்காமல் இருந்தது. வாடகை வீட்டினர்கள் ரூ3000 செலுத்தி பிரீபெய்ட் மீட்டர்களை பொருத்தினால் 200 யூனிட் வரை முற்றிலும் இலவசம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

author avatar
Vidhusan