தமிழகத்தின் மூன்றாவது மொழி! பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமாலையின் சூசக பேச்சு!

கரூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உத்திரபிரதேசத்தில், இளம்பெண் உயிரிழப்பு வழக்கு சம்பந்தமாக உயர் காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்தந்த மாநிலங்களே மூன்றாவது மொழியை தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது  தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் … Read more

எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க வேண்டாம்! – பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை

உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சி பிரபலங்களும், மக்களும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர், இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக 4 பேரை கைது … Read more

அதிமுக – பாஜக கூட்டணி திருமண பந்தம் போல உள்ளது-அண்ணாமலை..!

மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்கள் மிகச் சிறப்பாக உள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்கும்.மேலும், அதிமுக – பாஜக கூட்டணி திருமண பந்தம் போல இருக்கிறது என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி 3 வேளாண் மசோதாக்களை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது. இம்மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில்  இருந்தே பஞ்சாப், ஹரியானா  மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை … Read more

#BreakingNews : பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்ததினங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை  ,பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ்,தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு துணைத் தலைவர் பதவி வழங்குவதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். #BreakingNews … Read more

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எஸ்.ஆர். சேகர் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிவு. கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கடந்ததினங்களுக்கு முன் தனது பணியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அதன்பின் தமிழகம் வந்த அவருக்கு கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகம் முன்பு நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி வரவேற்பு … Read more

சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டிடுவேன் – முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி

சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டிடுவேன் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் பதவியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அண்ணாமலை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அக்கட்சியில் இணைந்த பின்னர் தமிழகத்தில் முதல் முறையாக அவர் கோவை மாவட்ட பா.ஜ.க அலுவலகத்திற்கு இன்று வந்தார். அப்போது, பேசிய அண்ணாமலை, தொண்டனுக்கும் தலைவனுக்கும் பாஜக கட்சியில் … Read more

நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது – பொன். இராதாகிருஷ்ணன்

அண்ணாமலை போன்ற நல்ல படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது – பொன். இராதாகிருஷ்ணன் ட்வீட். நேற்று டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். இதையடுத்து தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பேசினார். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை … Read more

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.!

டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், சமீபத்தில் திடீரென அவரது பணியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என தெரிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இனையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா … Read more

பாஜகவில் இணைகிறாரா..? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை..!

கர்நாடகவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, சமீபத்தில் திடீரென தனது பணியில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என கூறினார். இதற்கிடையில், ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் இவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.