கர்நாடகவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, சமீபத்தில் திடீரென தனது பணியில் இருந்து விலகினார். சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என கூறினார்.
இதற்கிடையில், ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் இவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலை டெல்லியில் உள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.