தேர்தல்கள் முடிந்தன..! இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது – கமலஹாசன்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து கமலஹாசன் ட்வீட்.  விலை உயர்வு  தமிழகத்தில் நேற்று பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கமலஹாசன் ட்வீட் இந்த விலைவாசி உயர்வு … Read more

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.36,280 க்கு விற்பனையாகிறது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.36,280 க்கும், கிராமுக்கு ரூ.21 உயர்ந்து, ரூ.4,535க்கும்  விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து, ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கடந்த டிச.1 ஆம் தேதி அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக அரசைக் கண்டித்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு … Read more

#Breaking:வரலாறு காணாத மதுரை மல்லிகைப்பூ விலை – 1 கிலோ எவ்வளவு தெரியுமா?

மதுரை:மல்லிகைப்பூ விலை அதிகரித்து வரலாறு காணாத அளவில் கிலோ ரூ.4000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூக்கள் விலை கடுமையாக அதிகரித்து கிலோ ரூ.4000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து,தேவை அதிகரித்துள்ளதாலும்,நாளை முகூர்த்த நாள் என்பதாலும்,வரலாறு காணாத அளவில் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும்,மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.2000-க்கும்,முல்லை பூ கிலோ ரூ.1500-க்கும்,புச்சி பூ கிலோ ரூ.1200-க்கும்,பட்டன் ரோஸ் … Read more

இல்லத்தரசிகளே..! நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் இந்த பொருளின் விலை இன்று முதல் உயர்வு..!

தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த அக்டொபரில் சிவகாசியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தீப்பெட்டியின் விலையை உயர்த்துவதாக  எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், விலை உயர்வு அமலுக்கு வந்ததையடுத்து, தீப்பெட்டி ஒன்று ரூ.2-க்கு  செய்யப்படுகிறது.

இல்லத்தரசிகள் ஷாக்..! ஒரு கிலோ தக்காளி ரூ.130..!

கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சமீப நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை … Read more

அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை….! ரூ.265 உயர்வு…!

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 268 உயர்ந்து ரூபாய் 2,133 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சமீப காலமாக சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  இதனால், அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குளாகி வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். அந்த … Read more

இல்லத்தரசிகளே…! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை…!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து சவரன் ரூ.35,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இரக்கம் காணப்படுகிறது. பொதுவாக பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை நகையில் செலுத்துவதால், தங்கம் விலையில் ஏற்படக் கூடிய மாற்ரங்கம் குறித்து உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து சவரன் ரூ.35,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் … Read more

அக்டோபர் 1 முதல் வாகனங்களின் விலை உயர்வு – டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ்,அதன் வர்த்தக வாகன வரம்பின் விலையை அக்டோபர் 1, 2021 முதல் 2% அதிகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி,இந்த 2 சதவீத வரம்பில் பயனுள்ள விலை உயர்வு, மாடல் மற்றும் வாகனத்தின் மாறுபாட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் கூறுகையில்:”எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற பொருட்களின் … Read more

இன்று முதல் கிடுகிடுவென உயர்கிறது மதுபானங்களின் விலை..!!விலை விபரம் இதோ

தமிழகத்தில் இன்று முதல்   மதுபானங்களின் விலை உயர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 ஆண்டுகள் கழித்து உயர்கிறது பீர் முதலிய மதுபாணங்களின் விலை. தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள்  இன்றளவும் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் மூடுவதற்கு வழி தேடினால் மதுபானக் கடைகளை முழுவீச்ச்சில் … Read more