மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.! – இணை அமைச்சர் முருகன் உறுதி.!

புதுச்சேரி மீனவர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதியளித்துள்ளார்.  புதுச்சேரியில், ஸ்ரீ வெங்டேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் Modi@20 எனும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகத்தை அறிமுகப்படுத்ததும் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று கலந்துகொண்டு வெளியிட்டார். பின்னர் புதுச்சேரி மீனவர்களுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். அதுகுறித்து பேசிய அவர், மீனவர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ‘ என … Read more

நீலகிரியில் 138 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை.! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்.!

நீலகிரி முதல் கூடலூர் வரையில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.  நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்திற்கு (ஊட்டி) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார். அங்கு ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், ‘ மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நீலகிரி முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று … Read more

மோடியின் பிறந்தநாளே சமூக நீதி நாள் – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள் என அமைச்சர் எல்.முருகன் பேட்டி.  பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன்  அவர்கள், சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தூய்மை பணி திட்டத்தை வைத்தார். அதனை  தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் அவர்கள், உண்மையான சமூகநீதியை நிலை நிறுத்திய பிறந்தநாளான இன்றே சமூக நீதி நாள். பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறார்.

உலகத்துக்கே வழிகாட்டியாக மாறி வரும் இந்தியா.! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்.!

மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டங்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். இது போன்று நம் பிரதமரின் செயல்பாடு உலகத்திற்கே வழிகாட்டும் நாடாக இந்திய நாடு உயர்ந்து வருகிறது – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.பெருமிதமாக குறிப்பிட்டார். நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பாக சென்னை மண்டல அலுவலகம் சார்பாக 75வது இந்திய சுதந்திர தின விழாவை ஒட்டி, … Read more

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் – எல்.முருகன் ட்வீட்

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்வீட்.  தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றுக் கொண்டார். இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார். இது காண்போர் அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் இது குறித்து மத்திய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் … Read more

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக அல்ல.. வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – அமைச்சர் எல்.முருகன்

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் எல்.முருகன் பேச்சு.   மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எல்.முருகன் அவர்கள் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். தமிழர்கள் மற்றும் … Read more

முரசொலி நில வழக்கு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன்,கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை,கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து,எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் … Read more

ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பை தவிர்த்திருக்க வேண்டும்..! – எல்.முருகன்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை தமிழக கட்சிகள் தவிர்த்திருக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.  நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்  தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், … Read more

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.முருகன் …!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திருவெல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளனர். இன்று சித்திரை வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் டாக்டர் பீமாராவ் அம்பேத்கரின் ஜெயந்தியும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அரசியல் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், … Read more

தமிழக அரசு அமைத்த குழு உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்துவிட்டதா..? – எல்.முருகன்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் இன்று சென்னையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உக்ரைனில் இருந்து தினமும் 4 ஆயிரம் மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதுதான் மத்திய அரசின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதுவரை மத்திய அரசு உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 15,000 பேர் இந்தியா வந்துள்ளது. … Read more